அடுத்த ஐந்து நாளிலும் இரூவருமே காலேஜ் முடிந்து இரவு வரை ஊர் சுற்ற தான் செய்தனர் காரணம் ஐந்தூ நாளில் அவனது ரிஸல்ட் வந்தாள் அடுத்த மூன்று நாளுக்குள் அமைரிக்கா போயே ஆக வேண்டுமல்லவா.. ஒரு நாள் தாமதம் ஆகினால் கூட அந்த வாய்ப்பு இரண்டாம் இடத்தை பெற்றவனுக்கு சென்று விடுமாம்
"என்ன சிவா டல்லா இருக்க?" என்று கேட்டாள் ஷ்ருதி பீச்சிலிருந்த மண்ணை ஒரு புடி எடுத்து அதை கையில் ஒரு சிறு துவாரத்தின் வழியாக தூவி கொண்டே "டல்ன்னு ஒன்னும் கிடையாது ஷ்ருதி ஜஸ்ட் போனும்ல அதான் யோசிக்கிறேன்" என்றதும்
"போறதுக்காக தானே நீ வைட் பன்னிட்டே இருந்த இப்போ யோசிக்கிறன்ற?"
"அய்யோ போறதுல்ல எனக்கு ப்ராப்ளமில்லப்பா அதுல ரொம்ப க்ளியரா தான் இருக்கேன் நான. யோசிக்குறது சிந்துவ பற்றி தான் இந்த இருபத்தியிரண்டு வயசுல எனக்கே சமைக்கவோ துணி துவைக்கவோ எதுவும் தெரியாது நான் போயிட்டா சிந்தூவ அப்பாகிட்ட கூட்டி போக சொல்லனும்ல அப்டி அப்பா கூட்டி போனா அப்பாவுக்கு சிந்துவோட எந்த வேலையும் செய்ய முடியாம இருக்கும் யேன்னா பிஸினஸ் பன்னிக்கிட்டு சிந்துவோட அன்றாட வேலைகலை கவனிக்க கஷ்டமோன்னு தோனுது"
"நான் ஒரு ஐடியா சொல்டுமா?" என்று கேட்டதும் தலையசைத்தான்.
"எங்க வீட்ல இருக்குற நான்கு வர்கர்ஸ்லயும் பத்மா அப்டின்ற ஒரு அக்கா தான் எனக்கு ரொம்ப பிடிச்சவங்க
அவங்களுக்கு பொறுப்பும் ஜாஸ்தி உண்மையா சொல்னும்ன்னா நான் அம்மா கிட்ட சொல்லாத எலல்லாமே அவங்க கிட்ட சொல்லி இருக்கேன். அதோட அவங்க கண் முன்னால எவ்ளோ பணம் இருந்தாளும் அத எடுக்குவோட தொடவோ மாட்டாங்க எனக்கீ தெரிஞ்சி ரொம்ப விஸ்வாசமான ஒரு ஆள்ன்னா அது பத்மா அக்கா தான்"
"இதுல ஐடியா என்ன இருக்கு?"
"இருக்கே" என்று விட்டு அவளே "நான் அவங்க கிட்ட ஆல்ரெடி நம்ம லவ் பற்றி சொல்லி இருந்தேன்ல சோ அவங்கள சிந்துவ பார்த்துக்க அனுப்பி வைக்கட்டுமா?"
ESTÁS LEYENDO
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
Ficción Generalகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...
