என்னவனின் தவிப்பு

93 1 4
                                    

என்று நாம் பிரிந்திருந்தோம்?
மீண்டும் இணைந்து மகிழ்ந்திருக்க...

"என் கரத்தில் நீயும்
உன் பிடியில் நானும்"

ஏன் இந்த நெருக்கம்

எதை கொடுக்க அரவணைத்தாய்
விழித்திரையை வருடும் கானல்நீர் உற்சாகதிற்கே...
என் மனமோ தளிர்விட்டு துள்ளுதடி...
உன் அன்பின் அடைமழையில்  நனையத்தான்

உன் சட்டென்ற புன்னகையோ..
கார்முகில் மௌனம் கலைத்த மின்னலாய்....

அடைமழையில் எனை சாய்த்தாய்
உன் கானல்நீர் பார்வையை  காதல் கடல் என்று நினைத்து
நாளும் நான் நீந்திடவே
உன்சிறு கலங்கரை புன்முருவல் ஒளி போதுமடி...
நாம் கரைசேர்ந்து வாழ்ந்திட...!

உன்னில் நானும் என்னில் நீயும்
மீண்டும் தேடுகின்றோம்
நம்மில் வாழும் காதல் அதை...

எவனோ தன் கவிதை சிறக்க பாடிவிட்டான் காதல்  விலைமதிப்பற்ற பொருள் என்று ...

இன்று என் உயிர்காதல் பொருளறிய அக்கவியும் முயலுகின்றான் மண்ணோடு மண்டியிட்டு....

என்னுள் ஓர் அலை😜Where stories live. Discover now