அத்தியாயம் - 27

1K 38 20
                                    

Comments please..

உதய் வந்து சென்ற பிறகு பெரியவர்கள் அனைவரும் இளையவர்கள் அருகே வந்து, "தமிழ் இது உதய் தான?" என்றார் நந்தன். 

"ஆமா ப்பா" - தமிழ் 

"ஆளே மாற்றிட்டான்லங்க?" உதய்யின் வாகனம் சென்ற திசையில் பார்த்து கேள்வி எழுப்பினார் ஷீலா. 

"ஆள் மட்டும் இல்ல தமிழ் அம்மா, அவனும் மாறிட்டான். மனசு இறுகி போ நிக்கிறான், காயத்திரி போனதுல இருந்து. எந்த விசேஷத்துக்கு வர்றதில்ல. வீடு விட்டா ஆபீஸ், ஆபீஸ் விட்டா வீடு தான் அவனோட வாழ்க்கை" மகனின் மூலம் கேட்ட வார்த்தைகளை வைத்து கூறினார் ஆதவனின் அன்னை. 

"ஆனா இவன் ரொம்ப ஓவரா பன்றான் ம்மா. ஆபீஸ் அவனோடதுனு சொல்றான்" குற்ற பத்திரிக்கை வாசித்தான் ஆதவன் அன்னையிடம் ஆதங்கம் தாங்காமல். 

"பத்தரத்துல தெளிவா இருக்குதுல ஆதவா? அப்பா கடன் வாங்கிருக்காங்க. இத இதோட விட்டுடுங்க ப்ளீஸ்" ஆதி தலை குனிந்தே அமைதியாக வினவினான். 

"அப்ப துறை எங்க ஆபீஸ் வப்பிங்க?" - ஆதவன் "ஏற்பாடு பண்ணலாம்" என்று முடித்துவிட்டான் ஆதி. 

மேலும் ஆதவன் பேச வர, கெளதம் அவன் தோளில் கை போட்டு வேண்டாம் என்று தலையை ஆட்டினான். 

"நல்லது பண்ண போறோம் எத பத்தியும் யோசிக்க வேணாம் ஆதவா, ஆரமிச்சத்த அப்டியே கொண்டு போகலாம். ஆபீஸ் இல்லனா என்ன? ஒரு குடிசையை போட்டு வச்சிடலாம்" நிகழ்ந்தவையை கூட பெரியவர்கள் சகுனம் சரியில்லை என்று பேசிவிட கூடாதென்று எண்ணம் ஆதிக்கு. 

"ஆதி சொல்றது சரி தான் ஆதவா. பிளான் போடுறது எல்லாம் வீட்டுலையே பண்ணிடுவோம். கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என்றான் தமிழும் ஆதியுடன் இணைந்து. 

"என்னமோ பண்ணுங்க டா. ஆனா இவன் அவனுக்கு ரொம்ப தான் சப்போர்ட் பன்றான்" என்றான் ஆதவன் எரிச்சலாய். 

ஆதவன் தோளில் கை போட்டு கழுத்தோடு நெருக்கிய ஆதி, "அடேய் என்னடா ஆங்கிரி பேர்ட் மாதிரி இப்டி கோவ படுற. வா உனக்கு ஒரு குண்டு சோடா வாங்கி தர்றேன்" 

இணையா துருவங்கள் (Completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang