மருமகள் பேசியதில் வாய் விட்டு சிரித்தவர், "என்ன வைஷு வில்லி மாதிரி பேசுற?"
"பின்ன உங்க பையன் பண்றது ஓவரா தான் இருக்கு. உங்ககிட்ட ப்ரப்போஸ் பண்ண மாதிரி அவர்கிட்டையும் ப்ரப்போஸ் பண்ணேன். அதுக்குன்னு இப்படியா பயந்துட்டு ஓடுறது?"
"என்ன அவன்கிட்டயும் பேசிட்டியா? ஏன்டா" இதை கேட்டு தான் மகன் ஓடுகிறானோ என்ற எண்ணம் அவருக்கு.
"ஆமா ரெண்டு வீட்டு ஆளுங்கள பொறுத்தவரை இது அரேஞ்ட் மேரேஜா இருக்கனும் அத நீங்க பாத்துக்கோங்க, ஆனா அவருக்கு தெரியணும் நான் அவரை விரும்பி தான் கல்யாணம் பண்ண போறேன்னு"
"கார்த்தி ஒரு பிடிவாதக்காரன் வைஷு மா... அவனுக்கு ஒரு விசியம் புடிக்கலைனா யார் என்ன சொன்னாலும் செய்ய மாட்டான்" அவர் கூறியதை கேட்டு வைஷ்ணவிக்கு முகம் வாடியது.
"வைஷ்ணவி.." பெரியவரின் குரலில் ம்ம்ம் கொட்டியவள் இப்பொழுதும் அமைதியாக இருக்க, "எனக்கு உன்ன புடிச்சிருக்கு ஆனா அதே சமயம் கார்த்தி விருப்பமும் எனக்கு முக்கியமல்ல? இத பத்தி அவன் உன்கிட்ட பேசுறப்ப மூஞ்சில அடிச்ச மாதிரி வேணாம்னு சொல்ற ஆள். அப்ப உன் மனசு கஷ்டப்பட கூடாது அதுக்கு தான் நானே இப்ப சொல்றேன்"
"சமையல் என்கிட்டே பேசுச்சு... இப்போ தான். வேணாம் வேணாம்னு சொல்றாரே தவற புடிக்கலைனு ஒரு வார்த்தை சொல்லல அத்தை. அப்ப அவருக்கு என் மேல ஒரு ஆசை இல்லனாலும் வேணாம்னு சொல்ல தோனலல?" அவருக்கும் அந்த யோசனை அவள் கூறியதும் தான் வந்தது.
"ஆமா தான்டா... ஆனா எனக்கு நீ ரொம்ப ஆசையா வளக்குறது புடிக்கல"
அவளும் யோசித்து, "சரி நீங்க சொல்ற மாதிரி இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்க யோசனைக்கு ஒரு டெஸ்ட். உங்க பையன்கிட்ட உங்க அண்ணன் பொண்ண அவருக்கு பொண்ணு பாக்கலாம்னு கேளுங்க. எனக்கு சொன்ன மாதிரி யோசிக்கலாம் பாக்கலாம்னு சொன்னா அவரை விட்டு அமைதியா இருக்கேன்.
அப்டி வேணாம்னு சொன்னா உங்க பையன் என்கிட்ட சிக்கிட்டதா வச்சுக்கோங்க. அத நீங்களே நெனச்சாலும் இனி மாத்த முடியாது"

YOU ARE READING
டிங் டாங் காதல்
Romance"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. "உங்க கோவம் எனக்கு...