அன்று ஞாயிற்றுக்கிழமை. வைஷ்ணவியின் இல்லம் மொத்தமும் ஆனந்தமாய் மிளிரியது. காரணம் கார்த்தியின் மொத்த குடும்பமும் வைஷ்ணவியை முறையாய் பெண் பார்க்க வந்திருந்தனர். இரு குடும்பமும் முதலிலே பேசி வைத்திருந்த காரணத்தால் சேர்மத்தாய்க்கும் சுபத்ராவிற்கும் வைஷ்ணவியின் பிரியத்தை பற்றி தெரியவில்லை.
அதனால் எந்த விதமான இடையூறும் இல்லாமல், சங்கடமான பேச்சுகளும் இல்லாமல் இயல்பான பேச்சுகளுடன் அமைதியாக நகர்கின்றது. மறு பக்கம் வைஷ்ணவியின் சகோதரன் சித்தார்த் மாப்பிள்ளை வீட்டாரை கவனிக்க தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி அடுக்கிக்கொண்டே இருந்தான்.
வைஷ்ணவி தன்னை தான் பெண் பார்க்க வந்துள்ளனர் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் அவர்கள் பேசுவதை நின்று ஆசையாக கேட்டுக்கொண்டிருந்தாள்.
"வைஷ்ணவி உள்ள வா" அடக்கப்பட்ட கோவத்தோடு மஹேஸ்வரி மகளை கடிந்தார்.
சுருங்கிய முகத்துடன் அறைக்குள் சென்ற மகளை பார்த்தவர் அவள் பின்பே செல்ல, மகாலட்சுமியும் அவரோடு சென்றார்.
அங்கு வியர்வை வடிந்த முகத்துடன் ஷெர்லின் தோழிக்காக சேலையின் மடிப்புகளை நேர்த்தியாக எடுத்து அயர்ன் செய்து உள்ளே வந்த தோழியை முறைத்து நின்றாள்.
"ஐ ரெடியா?" மகிழ்ச்சியாக வைஷ்ணவி தோழியிடம் சென்றாள்.
"அது ரெடி ஆகி பத்து நிமிஷம் ஆச்சு" அன்னையும் மகளை பார்த்து கோவப்பட்டார்.
"அட இதெல்லாம் எதுக்கு வைஷ்ணவி அம்மா? வைஷ்ணவியை தான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே. பிள்ளை புடவை கட்டி கஷ்டப்பட வேணாம். விடுங்க இந்த சுடிதார் கூட அழகா தான் இருக்கு என் மருமகளுக்கு" வைஷ்ணவியை பார்த்து இன்முகமாய் மஹாலக்ஷ்மி கூறினார்.
"அய்ய இந்த டிரஸ் போட்டு உங்க கூட நிப்பாளா இவ?" - ஷெர்லின்
"ஏன் இந்த டிரஸ்க்கு என்ன கொறச்சல்?" - வைஷ்ணவி

YOU ARE READING
டிங் டாங் காதல்
Romance"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. "உங்க கோவம் எனக்கு...