விடாமல் துரத்துராளே 36இரவு வீடு திரும்பி கொண்டு இருந்தான் தேவா. காரை ஓட்டிக் கொண்டு இருந்தவன் கவனமோ சாலையில் இல்லை. காலை நடந்த நிகழ்வை சுற்றியே இருந்தது.. காலையில் தியாவை முத்தமிட்டது எப்புடி என காலையிலிருந்து இப்போது வரை கோடி முறை அந்த கேள்வியை தனக்குள்ளே கேட்டு கொண்டே இருக்கிறான். ஆனால் விடை தான் கிடைத்தபாடில்லை… தேவாவிற்கு முத்தம் ஒன்றும் புதிது இல்லை தான். வெண்ணிலாவுடன் பல முறை முத்தம் பகிர்ந்து கொண்டு இருக்கிறான் தான்.. அதன் பிறகு அவன் உறவு கொண்ட எந்த பெண்ணிடமும் இதழ் முத்தம் பகிர்ந்து கொண்டது இல்லை. அந்த பெண்களே உணர்ச்சி மிகுதியால் முத்தமிட முயன்றாலும் தேவா அதை தவிர்த்து விடுவான். முத்தம் என்பது அன்பின் காதலின் அடையாளம் என்பது தேவா கருத்து. ஆனாலும் மனையாளின் இதழில் ஏதோ மாயம் இருப்பதாக தோன்றியது.. அவள் இதழின் ஈரம் இன்னும் உதட்டின் மேல் இருப்பது போன்று உடல் முழுவதும் குறுகுறுத்தது.. மனைவியிடம் பகிர்ந்து கொண்ட முத்தம் உதடு மட்டுமில்லை உயிர் வரை இனித்தது.. அந்த காட்சியே திரும்ப திரும்ப கண்முன் வந்து போனது.. கல்யாணமாகி ஒரு வாரம் மட்டுமே முடிந்திருக்கும் நிலையில் தியாவும் அவன் காட்டும் நெருக்கம் தேவாவிற்கே ஆச்சர்யமாக இருந்தது.. விலக்கனும் விலக்கனும் என்று நினைத்தே அதிகமாக நெருங்குவதால் தோன்றியது. இது எல்லாம் எப்புடி ஏன் என்ற கேள்வியை தான் தனக்கு தானே கேட்டு கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டு இருந்தான்..
தேவா எனக்கு பதில் தெரியும் நான் சொல்லட்டுமா என்றபடி அவனின் மனசாட்சி வெளிவந்தது.
சொல்லு தேவா கேட்க
ஏன்னா நீ தியாவ லவ் பண்ற
ச்சே ச்சே இல்ல இல்ல அது எல்லாம் ஒன்னும் இல்ல என அவசரமாக பதறினான் தேவா.
ஒன்னும் இல்லாமா தான் அந்த புள்ள உதட்டை கடிச்சு வச்சயா மனசாட்சி சரியாக தேவாவை மடக்க,
அது வந்து அது என பதில் சொல்ல திணறியவன் உன்கிட்ட வந்து இப்ப ஏதாவது விளக்கம் கேட்டனா, முத இங்கிருந்து நீ கிளம்பு என விரட்டினான்..

YOU ARE READING
விடாமல் துரத்துராளே!!
Romanceதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...