அதிக வெளிச்சமும் இல்லாமல் இருளும் இல்லாமல் மெல்லிய இருள் சூழ்ந்த அந்தப் புலர்ந்தும் புலராத காலை பொழுதில் குயில்கள் குயில் பாட்டு பாடிட கிளிகள் அதற்கேற்ப அதன் ஜோடியோடு காதல் பேசிட உனக்கு நான் எதிலும் சளைத்தவள் இல்லை என்று குருவிகளும் அதன் மொழியில் காதல் பேசிட மற்ற பறவையினங்களும் அதனோடு சேர்ந்து கொள்ள மெல்லிய குளிர் காற்று உடலை வருடிச் செல்ல.....
இதை எதையுமே உணராமல் நம் நாயகி நன்கு உறங்கி கொண்டு இருந்தால் அந்த வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க இதற்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவள் உறங்கிக்கொண்டிருந்தாள்....
"ஏய்...!! சாரா எழுந்துருடி எவ்வளவு கத்துறான் கொஞ்சமாவது ஆசைரால பாரு இப்போ நீ எழுந்துக்குரிய இல்லையா "என ராதா கத்த
"அம்மா ஏன்மா காலங்காத்தால இப்படி ஊரையே ரெண்டாகுறமாறி கத்துற"
" ஏண்டி சொல்ல மாட்ட ..!!
நேத்து என்ன சொன்ன நான்?? ""என்னம்மா சொன்ன?? "
" இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வரங்கனுதானே சொன்ன... மாப்பிள்ளை வீட்டுக்காரங்களே வந்துருவாங்க போலருக்கு ஆனா நீ இன்னும் பெட்லேருந்தே எழுந்துகாம இருக்க போய் சீக்கிரம் குளிச்சுட்டு புடவை கட்டிகிட்டு பொண்ண லட்சணமா இருடி...
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துரப் போறாங்க சீக்கிரம் போ....""என்னம்மா வரவனை மாப்பிள்ளைனே நீ முடிவு பண்ணிட்டியா..."
"ஆமாடி! நாங்க முடிவு பண்ணியாச்சு தான் நாங்க மாப்பிள்ளை பார்த்தாச்சு எங்களுக்கு மாப்பிள்ளை ரொம்ப புடிச்சிருக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு உன்ன புடிச்சு போச்சு அடுத்து முகூர்த்தத்தில் கல்யாணத்தை முடிச்சுடலாம்னு இருக்கோம்.....
இன்னைக்கு நீ சும்மா வந்து நின்னா மட்டும் போதும் மத்த எல்லாத்தையும் நாங்க பத்துப்போம்... "" அம்மா நான் இன்னும் மாப்பிள்ளை பாக்கவே இல்ல....
நீங்க பார்த்துட்டா போதுமா நான் பார்க்க வேண்டாமா எனக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கலாமா...."