அத்யாயம் - 2

2.7K 72 46
                                    

"சார்... அந்த புது ப்ரொஜெக்ட்ல கொஞ்சம் ப்ராப்லம்"

சக்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு, "கேபின் உள்ள போய் பேசிக்கலாமா சக்தி?" என்றான் உதய்

அவன் கேள்வி கேட்பது போல் தோன்றவில்லை சக்திக்கு, கட்டளையிடும் அழுத்தம் தான் இருக்க, "சரி சார்" உடனே பதில் வந்தது சக்தியிடம் இருந்து .

சக்தி இயற்கையிலே பயந்த சுபாவம் உடையவன் ஆனால் வேலை என்று வரும்போது தீயாய் இருப்பான். அதனால் தான் என்னவோ உதய் மாதவன் அவனை எப்பொழுதும் தன் அருகில் வைத்து இருப்பான்.

"ஃபாரின் போற ஐடியா ஏதும் உங்களுக்கு இருக்குதா சக்தி?" துணியின் தரத்தை ஆய்வு செய்தவாறே கேள்வியை கேட்டான் உதய்.

"இப்ப வரைக்கு அப்டி எதுவும் இல்ல சார் பட் போனா நல்ல தான் சார் இருக்கும்" ஒரு வித கனவோடு வந்தது அவன் குரல். யாருக்கு தான் இருக்காது வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆசை.

"ஒருதடவையாச்சும் அம்மாவை பிலைட்ல கூட்டிட்டு போகணும் சார்" - சக்தி

"அம்மாவை அப்பறம் கூட்டிட்டு போகலாம் சக்தி அதுக்கு முன்னாடி நீங்க என்ன பண்ணுறீங்க நாளைக்கு மார்னிங் ஒரு 7 மணி போல ஏர்போர்ட் போங்க, ஜெர்மன்ல இருக்க நம்ம பிரான்ச்க்கு போய் மானிட்டர் பண்ணுங்க. ஒரு 3 மந்த்ஸ் அங்க இருக்குற மாறி இருக்கும் அதுக்கு அப்பறம் என்ன பண்ணனும் னு அப்பறம் சொல்றேன் நிலவரத்தை பொறுத்து. இப்ப கிளம்புங்க வீட்டுக்கு, போறப்ப என்ன இஷ்யூனு ஜெயன் கிட்ட சொல்லிருங்க நா பாத்துக்குறேன் அவன் கிட்ட தான் டிக்கெட் இருக்கு அதயும் வாங்கிக்கோங்க".

"ஆனா சார் ஆல்ரெடி அங்க உங்க மாமா இருக்காங்க நா எப்டி..." என்று இழுத்தவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் உதய் மாதவன்.

"எதுவும் சொன்னீங்க இப்ப?" என்று புருவத்தை உயர்த்தி கேட்டவனிடம்,

"இல்ல சார் நைட் ப்ளைட் இல்லையானு கேட்டேன்" - சக்தி

"போங்க சக்தி" இறுதி உத்தரவாக வந்தது அவன் குரல். மண்டையை ஆட்டிக்கொண்டே இடத்தை விட்டு சென்றான் சக்தி.

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now