AnsariMasthan
கடை திறந்ததும் முதல் ஆளா அந்த பெரியவர்தான் வந்தார்
நிற்க முடியாமல் திணறினார்
ஒரு ஸ்டூலை எடுத்து பையனிடம் போடச்சொன்னேன்
உட்காரமலேயே நின்றிருந்தார்
ஆர்வமாக எங்களையும் கடையையும் பார்த்தார்
மற்ற கஸ்டமர்கள் வர நாங்க பிசியானோம்
இடையிடையே அவரும் பேச்சு கொடுத்தார்
"யாவாரம் எப்படி தம்பி இருக்கு" என்றார்
நல்லா ஓடுதா" னு கேட்டார்
அப்பா வரலையா"னு கேட்டார்
அம்மா பற்றி விசாரித்தார்
ஒரு மணி நேரம் அவர் நகர்வதாக தெரியலை
லேட்டானா குடிக்க கஸ்டமர்களுக்கு ஏதும் தர மாட்டீங்களா ன்னார்
டீ குடிக்க சொன்னதுக்கு வேணாம் னு மறுத்துட்டு தண்ணி மட்டும் குடித்தார்
இலேசா எரிச்சல் வர ஆரம்பிச்சுட்டது
பேங்குக்கு போன அக்கவுண்டன்ட் நுளையும் தருவாயில் இவர் வெளியாக
அவரிடம் ஏதோ பேசி விட்டு நேராக என்னிடம் வந்த அக்கவுண்டன்ட்
"அவர்ர கடைதான் தம்பி இது
அப்பா இவ