புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.
பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்?
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.
"அழகே அழகே... எதுவும் அழகே!
அன்பின் விழியில்... எல்லாம் அழகே!
மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு!
மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!"
பாட்டிலேயே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இது தான் அழகு என எதையும் நிர்ணயித்து விட முடியாதென்பதை கதாப்பாத்திரங்கள் மூலம் கூற முயன்றுள்ளேன்.
கதையில் இரு வேறு ஜோடிகள் வெவ்வேறு பாதைகளில் பயணித்து இறுதியில் ஒன்றாக சங்கமிப்பார்கள்.
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.
பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை நம் நாயகன் எவ்வாறு வசந்தமாக்குகிறான் என்பதை காண்போம்மா...
"ஹஹஹா ஷாரு உன்னால என்னை love பண்ணவே முடியாது.."
"ஏண்டா??"
"என்னது டா வா?"
"ஆமா டா.. நான் அப்படிதான்டா சொல்லுவேன்டா.. "
"டானா பிச்சிபுடுவேன் பிச்சி..."
"சும்மா இந்த பயங்காட்டுற வேலைலாம் இங்க வச்சிக்கிடாதேடா..
நீ என் ஷக்தி.. அதை எந்த கொம்பனாலையும் மாத்த முடியாது.. ஏன் நீ நினைச்சாலும் கூட.."
"என்ன பெட்?"
"பெட்டா?"
"ஆமா நீதானே பெருசா சவால் விடுற இந்த பாரு.. i hate country girls and especially YOU"
"ஹஹஹா நீ என்னை love பண்ணுற நான் அதை எப்பவோ உன் கண்ணுல பார்த்துட்டேன்.. இப்பவும் பாக்கிறேன்...என்னைய love பண்ணல பண்ணலன்னு சொல்லிட்டு எப்படி நிக்கிற பார்த்தியா??" என்று கேட்க
அவள் சொன்னதை கேட்டு கவனித்தவன் திடுக்கிட்டு போனான்.
அவள் சுவற்றில் சாய்ந்து நிற்க..விட்டால் அவள் மேலேயே விழுந்து விடுபவன் போல் நெருங்கி நின்றிருந்தான்.
எரிச்சலுடன் காலை அங்கிருந்து பின்னால் நகர்த்தியவனை அவன் எதிர்பாரா நேரத்தி