sevanthi_durai
- Reads 982
- Votes 45
- Parts 10
"நான் மறுபடி திரும்பி வரும்போது நீ இ தே போல வீட்டுக்குள்ளயிருந்து கதவை திறக்கணும். இல்லன்னா.." என்று அவன் நிறுத்த.. அவள் கழுத்தை சாய்த்தபடியே தனது நாக்கை வெளியே நீட்டி, கண்களை அரையாக மூடி, இடது கை கட்டைவிரலை நீட்டி தன் கழுத்தினூடாக கத்தி போல இழுத்தாள்.
"கரெக்ட்.. கொன்னுடுவேன் உன்னை.." என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன் உள்ளே இருந்தவளின் கழுத்தும் வலது புற தோள்பட்டையும் இணையும் இடத்தை இடது கையால் பற்றினான். அவளின் இதழை சிறை பிடித்தவன் நீண்டதொரு முத்தத்தை தந்து விட்டு விலகினான்.