#2
"இது நான் ன்னா.. அப்றம் இது யாரு? என்கூட ஒரே தொட்டில் ல ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கா..?"
"அவள்.. என் மருமகள்.. உனக்கு.." என்று தொடங்கியவர் அதற்குமேல் குரல் வெளியே வராமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, க ண்கள் வடித்த கண்ணீருடன் முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அழத் தொடங்கினார் ஹாஜுமா..
இவர் இப்போது எதற்கு அழுகிறாரோ!? என ஹாஜுமாவை நினைத்து கனத்த இதயத்துடன் அங்கு நின்றுகொண்டிருந்தாள் ஆமினா.
"அஸ்ஸலாமு அலைக்கும்"
ஸலாம் வந்த திசையை நோக்கிப் பார்த்தன அந்த ஆறு கண்களும்..
அங்கோ ஸலாத்தை சொன்னவன் ஆமினாவின் மீது படிந்த தன் பார்வையை விலக்காமல் இரு கணங்கள் அப்படியே நின்றிருந்தான்.
#4
ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் -----
----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.
#1
•••
அந்த இரு விழிகள்..
நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன.
அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடைந்தன.
•••