மந்திர சக்திகள் கொண்ட தேவதைகளும், மாய உயிரினங்களும் நிறைந்த அற்புத உலகத்தில், தேவதைகள் வாழும் அழகிய ராஜ்ஜியமான பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றி ராஜ்ஜிய மக்களின் மனம் கவர்ந்த இளவரசியை மணக்க எண்ணுகிறான் தீய மந்திரவாதி அகோரன்.
ஆனால், அகோரனால் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்ற விடாமல் தடுக்கிறது, அரசரின் கழுத்தில் சங்கிலியால் பினைக்கப்பட்டு தொங்கி கொண்டிருக்கும் மந்திர சக்தி கொண்ட சிவப்பு நிற கல்,
மந்திர கல்லானது நூறு வருடத்திற்க்கு ஒரு முறை தன் சக்தியினை இழக்கும், அந்த மந்திர கல்லிற்க்கு மீண்டும் சக்தியினை அளிக்க வேண்டும், அந்த கல் தனது சக்தியை இழக்கும் நாளிற்காக தன் படையுடன் காத்திருக்கிறான் அகோரன்...
அகோரன் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றுவானா.? அவ்வாறு கைப்பற்றினால் தேவதைகளின் நிலை தான் என்ன.....?
வாருங்கள் நாமும் பயணிப்போம்.....
ஹாய் இதயங்களே...
இது என் இரண்டாவது கதை....
மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை...
(ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..)
படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது...
முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்...
தீராதீ