Re: கனவோடு நான்.. இமையாக நீ..
12 parts Ongoing பரபரப்பு மிகுந்த டெல்லியின் சாலையில் வெறித்த முகமும், வெற்றுப் பார்வையும் அணிந்தவளாய் நடந்தாள் உதயா. அவளுடைய கனவெல்லாம் ஒரே நாளில் தகர்ந்துப் போயிருந்தது. அவளைத் தீண்டிய காதலும் அவள் உணரும் முன்னே அவளைக் கடந்துவிட்டிருந்தது. "இன்னுமா இது துடிக்க வேண்டும்?" என்றுத் தன் இதயத்தை உள்ளூர சபித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் அலைப்பேசி அப்பா அழைப்பதாகக் காட்டியது. " அப்பா..." எனக் கதறி அழவேண்டும் போல் இருந்தது உதயாவிற்கு. அவள் தனிமையை வேண்டுவதை அறியாத அவள் கால்கள் அவளை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தன. ரயில் நிலையத்தில் ஆளில்லாமல் இருந்த இருக்கையில் அமர்ந்த உதயா, ஆன மட்டும் அழுத்துத் தீர்த்தாள். கடைசி விசும்பல் நிற்கும்போது தான் தன்னை எத்தனை கண்கள் கவனித்திருக்கக் கூடும் என்பது புரிந்தது. இப்பொழுது தன்னை அறியாமலே சுற்றியிருந்த