~~~~~~ரெஜி~~~~~~
ஒரு மழைக்கால
மாலையில்
எனது வானத்தில்
வானவில்லாய்
பூத்தாய் நீ.
வாழ்க்கையின்
வரைதிரையில்
வரையும்
எல்லா ஓவியங்களுக்கும்
உன்னிலிருந்தே
வண்ணந்தீட்டிக்
கொண்டிருக்கிறேன்
நான்
அன்புள்ள தோழர் தோழிகளே, நான் முதன் முதலாக எனது உணர்வுகளை வார்த்தை மணிகளாக இங்கு பதிவு செய்யவுள்ளேன்.... இவைகள் கவிதைகளா இல்லையா என்ற கேள்வியும் எனக்கு உண்டு.... இருந்தாலும் எனது உணர்வுகளை பதிவு செய்கின்றேன்.... உங்களிடம் இதில் ஏதாவது குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.... உங்களுடைய பரிந்துரைகளையும் நான் எதிர்பார்க்கின்றேன்..... நன்றி