1

443 35 19
                                    


கூட்டம் கூட்டமாய் படர்ந்து விரிந்த மேகங்களுக்கு இடையே, பறந்த தங்கச்சிலைப் போல் பராமரிக்கப்பட்ட அந்த 'இந்தியன் ஏர்லைன்ஸ்' விமானத்தில், வணிக வர்க்க மக்களுக்காகவே ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்த்திருந்தான், சத்யன்.

பயணிகள் சிலர் மகிழ்வுடனும், சிலர் சோர்வுடனுடம் காணப்பட்டனர். வணிகர்கள் சிலர் மும்முரமாக தம் மடிக்கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்தனர். ஆனால், நம் சத்யனின் முகத்திலோ, பல குழப்பங்களுக்கான அறிகுறிகள் தென்பட்டன.

அவன் தன் இருக்கையில் தலையை சாய்த்துக்கொண்டுக் கண்களை மூடினான். கண்களை மூடிய அவனுக்கோ தூக்கம் என்பது சிறிதளவு கூட வரவில்லை. நினைவுகள் பல சூறாவளிப் போல் தாண்டவமாடியது.

தன் தாய் ஏன் அந்த வீட்டிற்கு செல்ல மறுத்தாள்? எதற்காக அந்த வீட்டை, அந்த அழகிய ஊரை விட்டு வெளியேறினாள்? எதற்காக இப்போது அதை விற்கச் சொல்கிறாள்? ஏன் என்னை என் அறைக்குள் செல்ல தடை செய்தாள்? இவ்வாறு பல கேள்விகள் அவன் மனதை குடைந்தெடுத்தன.

சத்யனின் அன்னை லக்ஷ்மிக்கு வயது முதிர்ந்தமையால், அவளை விட்டுவிட்டு தான் மட்டும் வீட்டை விற்க 'மாயவனத்திற்குச்' செல்கிறான். இவற்றை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கையில் விமானம் தரை இறங்கியது. தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு, விமான நிலையத்திலிருந்து வெளியேறினான் சத்யன்.

தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வண்டியில், அவன் தன் சொந்த ஊரான மாயவனத்திர்க்குச் சென்றான். 'மாயவனம் தங்களை அன்புடன் வரவேற்கிறது' என்று எழுதப்பட்ட வரவேற்ப்புப் பலகையை கண்டதும், இவனுக்கு முதலில் நினைவுக்கு வந்தது தன் கனவு மங்கையாகிய மைத்ரா.

சிறு புன்னகை தன் உதட்டில் மலர, அவன் நித்திரையில் முழ்கினான். அவன் தங்க போகும் விடுதி வந்ததும், அவன் வண்டியோட்டி அவனை எழுப்பி, பெட்டிகளை அவனின் அறைக்கு கொண்டுச் சென்றான். பயணக் களைப்பாலும், காலநேர வேறுப்பாட்டாலும் சோர்வடைந்த சத்யன் தன் அறைக்குள் சென்றதும் அயர்ந்து உறங்கினான்.

மாயவனம்Where stories live. Discover now