"லூசு இன்னைக்கு பஸ்ல ஒரு அக்கா என் பக்கத்துல உட்காந்தாங்க" என்று குதூகலத்துடன் தொடங்கினாள்.
அவள் கதை கேட்கும் ஆர்வத்தைவிட அவளின் அந்த புன்னகையையும் விரியும் கண்களையும் காணும் ஆர்வமே எனக்குள்.
"அவங்க மடியில ஒரு குழந்தை ரொம்ப குட்டியா அவ்ளோ அழகா இருந்துச்சு"
"ம்" என்றவாறு அவள் விழிகளை பார்த்தேன்.
"ஒரு விரல நீட்டினேன். அந்த பாப்பா அப்படியே பிடிச்சிக்குச்சு" என்று புன்னகைத்தாள்.
"அந்த அக்காவும் என்ன பாத்து சிரிச்சாங்க"
"ம் அப்புறம்"
"ஸ்டாப் வந்துடுச்சு அந்த பாப்பா விரல விடவே மனசில்லாம இறங்குனேன்"
என சோகம் கலந்து அவள் முடிக்கவும் நானே குழந்தையென மாறி அவள் விரல் பிடித்துக் கொள்ளலாம் போல இருந்தது."அந்த பாப்பா சிரிச்சது அப்படியே மனசில இருக்கு" என புன்னகைத்தாள். அந்த புன்னகையில் அவளே குழந்தையோ எனத் தோன்றியது.