வாசங்கள் வீசும் பூவே
என் மூச்சில் கலந்திட ஆசை..!ஓவியங்கள் உடல் ஏற்ற வண்ணத்துப்பூச்சியே என் உடையாக மாறிட ஆசை. .!
ராகங்கள் இசைக்கும் குயிலே
என் பெயரை நீ உச்சரிக்க ஆசை..!கடல் தந்த மழை நீரே
முதல் துளியை என் கருமணியில்
ஏந்திட ஆசை..!வானவில்லை வளைத்து பிடித்து
என் வளையலாக்கிட ஆசை...!சுட்டெரிக்கும் சூரியனே
உன்னை முத்தமிட்டு குளிர வைக்க
ஆசை. ..!வண்டுக்களின் ரீங்காரத்தை
காலின் கொலுசாக்கிட ஆசை...!சந்தனமும், மஞ்சளும் என் குளிநீராகிட
ஆசை. ..!காற்றுக்கு இசைவு தரும்
இலைகளே..
என் இமையசைவில் நிறுத்திவிட
ஆசை..!நிலவொளியில் கொஞ்சம்
குழல் உளர்த்திட ஆசை..!இயற்கையே உன்னை காதலிக்கிறேன். ..
என்னவனை நெஞ்சோடு சேர்த்திடு.😘