இது காதலா…??
வானத்தில் தெரிந்த நிலவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா...அவளது மனம் பல கேள்விகளுக்கு விடை காண முயன்று கொண்டிருந்தது...சிறிது நாட்களாகவே அவள் எதை நினைத்து பயந்து கொண்டிருந்தாளோ,அது நாளை நடக்கப் போகிறது என நினைக்கும் போது அவளது கண்கள் அவளைக் கேட்காமலேயே கண்ணீர்த்துளிகளை பரிசளித்துக் கொண்டிருந்தன...
கண்ணீர் அவளை மொத்தமாய் நனைக்கத் தொடங்கிய நேரம் அவளைத் தேடி வந்தான் பிரணவ்...
"திவ்யா..இங்க என்ன பண்ணிட்டு இருக்க..தூங்கலையா...??"
அவன் வருவதை உணர்ந்து கண்ணீரை வேகமாய் துடைத்துக் கொண்டவள் அவன் புறம் திரும்பி அவனது கேள்விக்கு பதிலளித்தாள்..
"தூங்கணும்..ஆனால் தூக்கம் வரல...நீ தூங்கலையா..??"
"ம்ம்...எனக்கும் அதேதான்,தூக்கம் வருதேயில்லை.."
அவனுக்கும் அவளைப் போல் தூக்கம் வரவில்லையென்றதும் அவள் மனம் தானாகவே பல கற்பனைக் கோட்டைகளை கட்ட ஆரம்பித்தது...
"அவனுக்கும் எனக்கு தோன்றியது போலவே தோன்றியிருக்குமா??அவனும் என் மனநிலையில்தான் இருக்கிறானா??.."அவளுக்கு அதைப்பற்றி நினைக்க நினைக்க மனதில் சூழ்ந்திருந்த கவலைகள் அனைத்தும் ஓர் நொடியில் கரைந்து போனது...ஆனால் அவளது மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை..அவளது ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் காணாமல் போகும்படியாக அவன் வேறு சொன்னான்...
"நாளையோட கோட் நமக்கு தந்த ஒருவருஷம் முடிஞ்சு,நம்ம கேசும் நாளைக்கு கோட்டுக்கு வருது...நம்ம இரண்டு பேர் பக்கமுமே எந்த எதிர்ப்பும் இல்லாததால நாளைக்கே நமக்கு விவாகரத்து கிடைச்சிடும்னுதான் நினைக்கிறேன்...நாளைக்கு எல்லாமே நினைச்சமாதிரி முடிஞ்சாதான் நிம்மதியா தூங்க முடியும் போல...உனக்கும் அதனாலதான் தூக்கம் வரலையா திவி...??"
பிரணவ்வின் மனம் அவள் இல்லையென்று சொல்ல வேண்டுமென்று வேண்டிக் கொண்டது...அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியவே அவன் அவ்வாறு சொன்னான்...அவளது பதிலிற்காக காத்திருந்த ஓர் நொடியில் அவன் மனம் பழையதை மீட்டிடச் சென்றது...
YOU ARE READING
இது காதலா..??
Romanceதிருமணத்தில் எந்தவித ஒட்டுதலும் இல்லாத இருவர் கட்டாயத்தின் பேரில் மணம்புரிந்து கொள்கிறார்கள்...இறுதியில் அவர்களிருவரும் இணைந்தார்களா??இல்லையா??என்பதே கதை...