"காதலித்து பார்"
கண்கள் சிவக்கும் வண்ணம்
காதல் விழித்திருக்கும்...!பெயரென்ன என்ற வினாவிற்கு
மதிமயங்கி அவன் பெயரை உச்சரிக்கக் கூடும்....!துவங்கிய உரையாடலை முடிக்க மனமில்லாமல்...,
உளரக்கூடும்...!எதுவெல்லாம் உனக்கு பிடிக்கும் என்று ரசித்திருப்பாயோ...,
அதுவெல்லாம் மறக்கக்கூடும்...!பிடிக்காத பலவும் அவனுக்கு
பிடித்தமைக்காக...
பிடிவாதமாக மனதில் ஒட்டிக்கொள்ளும்...!ஈன்றெடுக்கா தாயாக
என்றுமே அவனை மனதில்
சுமக்கும் ஆசை அதிகரிக்கும்...!கனவிலும் அவனின் நினைவுகள்
விடாமல் துரத்தும்...!விழி நோக்க முடியாமல்...
கண்கள் தடுமாறக் கூடும்...!எத்தனை
உறவுகள் சூழுந்திருந்தாலும்...,
அத்தனையும் மறந்து
அவன் மட்டுமே எல்லாம் என்று
எண்ணத்தூண்டும்...!ஒரு உடலின் வலியில்
இரு உயிர்கள் துடிக்கும்...!இரு மனங்கள் ஆலோசித்து
ஒரு முடிவு எடுக்கும்...!
YOU ARE READING
❤நிலை மறந்த அவன் நினைவுகள்❤
Poetryஆதிக்கம் செய்வதேதோ...? என்னுள்ளே உன்னை கரைக்கும் உன் நினைவுகள் தானோ...! மீள் கொண்டு வெற்றி பெற வாய்புகலுண்டோ...? ஏனெனில் காதலின் தாகத்திற்கு முழுதாக உட்கொண்டாய் அன்றோ...!