காதல் கவிதைகளின் சிதறல்.

133 16 37
                                    

💐💐💐💐💐

காதலை காதல் என்று
   தெரியாமலேயே
காதலிக்கும்  முட்டாள்
     பெண் இவள்..

💐💐💐💐💐💐

நான் சிலிர்த்ததும்
    உன்னால் தான்
சிதைந்ததும் உன்னால் தான்...

💐💐💐💐💐💐💐

காலம் கடந்த பின்னர்
   கடந்து போகும் காதல்
அல்ல நான் உன் மீது
    கொண்ட காதல்.....

💐💐💐💐💐💐💐💐💐

நீ என்னை
   விட்டு போனதால்
என் நெஞ்சம்
   இங்கே பட்டு போனது..

💐💐💐💐💐

நேற்று நீ கொடுத்த
   நினைவுகள் தான்
இன்று என்னை
   நிலை குலையாமல்
வைத்து இருக்கின்றன..

💐💐💐💐💐💐

நீ இல்லாமல் வாழ
   முடிந்த என்னால்
உன் நினைவு இல்லாமல்
   வாழ முடியவில்லை..

💐💐💐💐💐💐

ஆண்டுகள் பல கடந்தாலும்
     என் மனதை ஆண்டு
கொண்டு இருப்பதும் ஆளப்
     போவதும் உன்
நினைவுகள் மட்டுமே....

💐💐💐💐💐💐💐

வலிகள் பாதி
    வரிகள் பாதி சேர்த்து
முழுதாய் கவியானேன்
      நான் இன்று.....

💐💐💐💐💐💐💐

கண்டதும் காதல் என்று
   உணரவில்லை தான்
ஆனால் உன்னை காணாத
   தருணங்களில் உணர்ந்தேன்
இது தான் காதல் என்று....

💐💐💐💐💐💐💐

ஊமையாகி போய் இருந்த
   மனதை பேச வைத்தது
என் குற்றமே இப்போது
    மனதினுள் அமைதியில்லாமல்
கத்தி ஆரவாரம் செய்கிறது...

💐💐💐💐💐💐

மொத்தமாக நான்
    சிதைந்து போன பின்னும்
இன்னும் சிதையாமல் உன்
     நினைவுகள் இருப்பது தான்
ஆச்சர்யமாய் இருக்கிறது...

💐💐💐💐💐💐💐

இதற்கு மேலும் போலி
    புன்னகையையும்
காயப்படவில்லை எனும்
     முகமூடியை அணிய
தோன்றவில்லை,, முகமே
     சிதைந்துவிட்ட பிறகு
முகமூடி இனி எதற்கு
    என்று தான்...

காதல் கவிதைகளின் சிதறல்... Where stories live. Discover now