💐💐💐💐💐
காதலை காதல் என்று
தெரியாமலேயே
காதலிக்கும் முட்டாள்
பெண் இவள்..💐💐💐💐💐💐
நான் சிலிர்த்ததும்
உன்னால் தான்
சிதைந்ததும் உன்னால் தான்...💐💐💐💐💐💐💐
காலம் கடந்த பின்னர்
கடந்து போகும் காதல்
அல்ல நான் உன் மீது
கொண்ட காதல்.....💐💐💐💐💐💐💐💐💐
நீ என்னை
விட்டு போனதால்
என் நெஞ்சம்
இங்கே பட்டு போனது..💐💐💐💐💐
நேற்று நீ கொடுத்த
நினைவுகள் தான்
இன்று என்னை
நிலை குலையாமல்
வைத்து இருக்கின்றன..💐💐💐💐💐💐
நீ இல்லாமல் வாழ
முடிந்த என்னால்
உன் நினைவு இல்லாமல்
வாழ முடியவில்லை..💐💐💐💐💐💐
ஆண்டுகள் பல கடந்தாலும்
என் மனதை ஆண்டு
கொண்டு இருப்பதும் ஆளப்
போவதும் உன்
நினைவுகள் மட்டுமே....💐💐💐💐💐💐💐
வலிகள் பாதி
வரிகள் பாதி சேர்த்து
முழுதாய் கவியானேன்
நான் இன்று.....💐💐💐💐💐💐💐
கண்டதும் காதல் என்று
உணரவில்லை தான்
ஆனால் உன்னை காணாத
தருணங்களில் உணர்ந்தேன்
இது தான் காதல் என்று....💐💐💐💐💐💐💐
ஊமையாகி போய் இருந்த
மனதை பேச வைத்தது
என் குற்றமே இப்போது
மனதினுள் அமைதியில்லாமல்
கத்தி ஆரவாரம் செய்கிறது...💐💐💐💐💐💐
மொத்தமாக நான்
சிதைந்து போன பின்னும்
இன்னும் சிதையாமல் உன்
நினைவுகள் இருப்பது தான்
ஆச்சர்யமாய் இருக்கிறது...💐💐💐💐💐💐💐
இதற்கு மேலும் போலி
புன்னகையையும்
காயப்படவில்லை எனும்
முகமூடியை அணிய
தோன்றவில்லை,, முகமே
சிதைந்துவிட்ட பிறகு
முகமூடி இனி எதற்கு
என்று தான்...