N.S கல்வி குழுமம்.. திருச்சி நகரத்திற்கு அப்பால் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கல்லூரி.... பொறியியல் படிப்புகளுக்கான கல்லூரி ... ஆர்ட்ஸ் & சயன்ஸ் பிரிவு என்று பிரமாண்டமான கட்டிடங்களே கல்லூரியின் பழமையையும் பெருமையையும் பறைச்சாற்றியது... இப்போது பணம் இருந்தால் படிக்காதவனை கூட சேர்த்துக் கொள்ளும் கல்லூரிகளில் இருந்து மாறுப்பட்ட ஒன்று.... படிப்பும் வேண்டும் பணமும் வேண்டும் அப்போது தான் இங்கு படிக்க இடம் கிடைக்கும் ... இந்த கல்லூரியில் இடம் கிடைத்தால் பெற்றவர்கள் சாதனையை நடத்தியதாய் பெருமைப்பட்டு கொள்வார்கள்...
அத்தகைய பெருமை வாய்ந்த அக்கல்லூரி
காலை வேளையில்..... பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது...
வண்ணமயமாக மாணவ மாணவிகள் இளமைக்கே உள்ள துள்ளலோடு வலம்வர அதற்கு தாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்பது போல் பேராசிரியர்களும் நேர்த்தியான உடை அணிந்து அவர்களுக்கே உள்ள கம்பீரத்தோடு அலுவலக அறையை நோக்கி சென்றுக் கொண்டிருக்க
பார்ப்பதற்கு மாணவியை போன்ற தோற்றத்துடனும் உடையில் பேராசிரியர் போன்றும் துள்ளலான நடையுடனும் அவளுடைய அக்மார்க் புன்னகையுடன்
அங்குள்ளவர்களின் வணக்கங்களுக்கு பதில் அளித்தவாறே அலுவலக அறையினுள் உள்நுழைந்தாள் நம் கதாநாயகி யாழ்இனியாமாநிறத்தில் லட்சணமான வட்ட முகத்தில் சிறிய பொட்டிட்டு வகிட்டில் குங்குமமிட்டு காட்டன் சேலையில் பெண்மைக்கே உரிய மிடுக்கோடு கையொப்பமிட்டு வெளியே வந்தவளை அவள் ஆருயிர் தோழி பரிதா முறைத்துக் கொண்டிருந்தாள்...
அவளை சற்றும் கண்டுக் கொள்ளாமல் நக்கல் சிரிப்போடு சென்றவளை கண்டு இன்னும் கோபம் கொண்டு அவளை நோக்கி சென்றவள்
"ஏய் இனியா எரும.. நான் கோவமா நின்னுட்டு இருக்குறத பார்த்தும் கண்டுக்காம போற.. உனக்கு எவ்வளவு கொழுப்பு " என கோபமாய் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பேசியவளை பார்த்து இனியாக்கு சிரிப்பு தான் வந்தது...
YOU ARE READING
நினைவே நனவாகிவிடுவாயா
Non-Fictionஹாய் நட்புகளே!!!!! என்னுடைய இரண்டாவது கதையோடு சந்திக்க வந்துவிட்டேன் செல்லம்ஸ்!!!!! முதலாவது கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு ஆரம்பிக்க போகிறேன்