...."...என் இருதயம் இங்கே
தனிமைக் கவி பாட...
என் விழிகளிரண்டோ
உனைத் தேடி அலைபாய...
என் காதல் முழுதையும்
மொழிபெயர்க்க ஆளின்றியே
காத்துக்கிடக்கிறேனடி...
எனைக் கொஞ்சமேனும்
காதல் செய்திடவே சகியே
உனக்கங்கே நேரமில்லையா...??...
மார்கழி மாதத்து மழையின் வாசம் அவளின் நாசியினை மெதுவாய் வருட,அதனை சுவாசித்தவாறே காரினை வேகமாய் செலுத்திக் கொண்டிருந்தாள் சகி...ஆனால் அவளின் வேகத்திற்கு தடையாய் ஒவ்வொரு சிக்னல் ஜங்சன்களும் சிவப்பு நிற ஒளி விளக்கை ஒளிரவிட்டுக் கொண்டிருந்ததில் முயல் போல் வேகமெடுத்தவள்,இறுதியில் மெதுவாகவே அவள் தங்கியிருந்த ப்ளாட்டை வந்தடைந்தாள்....நேற்றைய தினம் அவளிற்கு வைத்தியசாலையில் நைட் டியூட்டி என்பதால் காலையில்தான் வேலை முடித்து வந்திருந்தாள்...எப்படியும் இந்நேரத்திற்கு அவன் அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகியிருப்பான் என்ற சிந்தையோடே லிப்டில் ஏறியவள்,நான்காம் மாடிக்குச் செல்வதற்கான பட்டனைத் தட்டிவிட்டுக் காத்திருந்தாள்...
நான்காவது மாடிக்குச் செல்லவிருந்த அந்தச் சிறிய இடைவெளியில் அவளின் மனம் அவனை எப்படிச் சமாதானம் செய்து கொள்வதென்ற ஆராய்ச்சியில் இறங்கியது...ஆம் நேற்றைய தினம் மாலையில் நிகழ்ந்த அவன் தங்கையின் நிச்சயதார்த்த நிகழ்வில் அவனின் மனைவியாய்,அவன் குடும்பத்தின் மருமகளாய்,அவனது தங்கைக்கு அண்ணியாய் அனைத்தையும் முன்னின்று நடாத்தியிருக்க வேண்டியவள்...வைத்தியசாலையிலிருந்து அவசர கேஸ் என்று அழைப்பு வரவும் அங்கேயிருந்து பாதியிலேயே கிளம்பியிருந்தாள்...
விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில் வந்த தாயையும் சேயையும் காப்பாற்றியவளுக்கு,அவனின் கோபத்திலிருந்து எப்படித் தன்னைக் காத்துக் கொள்ளப் போகிறோம் என்பதுதான் தெரிந்திருக்கவில்லை..இதையே யோசித்துக் கொண்டு வந்தவள்,லிப்ட் திறந்து கொள்ளவும்தான் நடப்பிற்கே வந்து சேர்ந்தாள்....
YOU ARE READING
காதலிக்க நேரமில்லை
Short Storyகாதலுக்கும் காலத்திற்கும் இடையில் சிக்கித்தவிக்கும் இரு இருதயங்களின் கதை... "..நிகழ்கின்ற நிகழ்வுகள் எல்லாம் நிறம்மாறிப் போகலாம்... உனக்கான காலம் இங்கே இடம்மாறிப் போகுமா...??.."