ரொம்ப நன்றி சகோதரி. ஆயாவைப் போல் நிறையப் பெண்களுடைய வாழ்க்கையும் அப்படித் தானே இருக்கிறது. சமுதாயத்திற்குப் பயந்தும், பிறந்த வீட்டிற்குச் சென்றால் இதை விட மோசமான நிலைமை வரும் என்று நினைத்தே எத்தனை பெண்கள் தங்கள் நிலைமையை வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். அதைச் செயலில் காட்ட முடியாது. நம் கதையிலாவது சொல்லி ஆறுதல்படுத்தலாமே. அதைத் தான் எழுதியிருக்கிறேன்.
இது கொஞ்சம் தான். நான் வானவில் வாழ்க்கைக் கதையைப் படித்தீர்கள் என்றால் பெண்களின் நிலைமை என்ன, செய்யாத தவறுக்கு அவர்களுக்குக் கிடைக்கும் தண்டணை என்ன என்று நிறைய விசயங்கள் கூறி இருக்கிறேன். சீக்கிரம் நான் எழுதியது அத்தனை பாகத்தையும் போடுறேன். படித்துப் பார்த்து சொல்லுங்கள்.