பாகம் 39
அர்ஜுனும், இந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, நெருக்கமாய் கட்டிலில் படுத்திருந்தார்கள். அவர்களுக்கு தூக்கமே வரவில்லை. அழகிய புன்முறுவலுடன் மெல்ல அவள் கண்ணம் தொட்டான் அர்ஜுன். அவன் தன் கையை எடுத்து விடாமல் இருக்க, தன் கையை அவன் கை மீது வைத்துக் கொண்டாள் இந்து.
"நம்ம நாளைக்கு காலையில கோயிலுக்கு போகணும் " என்றான் அர்ஜுன்.
"ம்ம்ம் " அவன் அருகில் நகர்ந்து அவனை கட்டிக்கொண்டாள்.
அர்ஜுனும் அவளை தன் கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டான்.
"இப்படி உன்கிட்ட நெருக்கமா இருக்கிறது ரொம்ப கஷ்டம் தெரியுமா?" என்று பெருமூச்சு விட்டான்.
"நான் தூரமா இருக்கணும்னு நினைக்கிறீங்களா?"
"நிச்சயமா இல்ல"
"பின்ன?"
"நம்ம முடிவை மறுபரிசீலனை செய்யலாமான்னு யோசிக்கிறேன்" என்று சிரித்தான்.
"எந்த முடிவு?"
"நாளைக்கு ஃபிக்ஸ் பண்ணியிருக்கிற நம்ம ஃபர்ஸ்ட் நைட்டை, இன்னைக்கே மாத்திக்கிட்டா என்ன?"
"அப்படி மாத்திக்கிட்டா, உங்களால காலையில் சீக்கிரம் எழுந்துக்க முடியுமா?"
"நிச்சயமா சொல்ல முடியாது"
"அப்படினா தூங்குங்க..."
"எனக்கு தூக்கம் வரலயே"
"நம்ம இடத்தை மாத்துறது நல்லதுன்னு நினைக்கிறேன்..."
"ஏன் இடத்தை மாத்தணும்?"
"நான் உங்க நெஞ்சில படுக்குறதை விட நீங்க மாத்தி படுத்தா கரெக்டா இருக்கும். நீங்க தான், உங்க அம்மாவோட இதயத்துடிப்பை தாலாட்டு மாதிரி கேட்டு தூங்குவீங்களே..." என்று சிரித்தாள்.
"அதெல்லாம் பழைய கதை... இன்னைக்கு நான் அப்படி செஞ்சா, அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்" என்றான்.
தன் தலையை நிமிர்த்தி, அவள் அவனை பார்க்க, அவளை பார்த்து கண்ணடித்தான் அர்ஜுன். அவன் நெஞ்சில் பட்டென்று ஒரு அடி போட்டாள்.