author note

1.6K 51 45
                                    

ஹாய் நட்புகளே..

எப்படி இருக்கீங்க.. உங்களுடைய ஆதரவு இல்லை என்றால் கண்டிப்பாக.. இந்த கதையை தொடர்ந்து எழுதி இருக்க முடியாது.. ஏனென்றால் , தேர்ந்தெடுத்த கதை கரு அவ்வாறு இருப்பதாக கருதுகிறேன்..

ஒரு பெண்ணிற்கு.. நேசிக்கும் இருவர் மீதும்.. சலனம்.. பெற்றவர்களின் விருப்பத்திற்காக..  அதில் ஒருவனை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம்.. ஆனாலும் , அவன் நேசத்திற்கு. அவள் கொடுக்கும் மதிப்பு.. அதில் தெளிந்து வாழ்க்கை அழகாய் மாறும் பொழுது.. சூனியமாகிய நிலையில்.. மீண்டும் கணவனாக.. நுழையும் காதலன்.. ஒவ்வொரு தருணங்களிலும் அவள் அறியாமலேயே , ஏற்படும் மனச்சிதைவு.. சறுகாய் உலர்ந்திருந்த வாழ்வில்.. மலரச் செய்ய வந்தவனை ஏற்க முடியாத தடுமாற்றம்.. என்று அப்பெண்ணின் உணர்வுகளை பற்றியதாக இருக்க.. இன்றைய சமூகத்தின்.. பார்வைகளிலும்.. தவறான பெண்ணாக சித்தரிக்கப்பட்டுவிடக் கூடாது.. என்பதில்.. பல தடுமாற்றங்கள் என்னுள்.. ஆனால் , அவை அனைத்து.. தவிடு பொடியாகியது.. என் நண்பர்களின் கருத்துக்களாலும்.. அமைதியாக  இருந்தாலும் , ஆர்வமாக தொடர்ந்து படித்த..   சகோக்களாலும் என்பதை கூற இங்கு கடமைப்பட்டிருக்கிறேன் . சில சமயங்களில் , பதிவிற்கு அதிக தாமதமாகி ஏற்பட்டதற்கு..  காரணம் இதுவும் ஒன்று..

ஆனால் , இன்று இறுதி அத்தியாயத்தையும் பதித்துவிட்டேன்.. சூர்யா.. உதய்.. விஷாலி.. மூவரும்.. நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார்களா இல்லையா.. என்பதை நீங்களே கூற வேண்டும்..

இதில் உதய்க்கு நிகரான இடம் பிடித்திருப்பவன்.. நம் அர்ஜுன்.. அவன் கண்டிப்பாக மற்றொரு கதையில்.. நாயகனாக.. உங்களை சந்திக்க காத்திருக்கிறான்.. என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. 

மறக்காமல் , அனைவரின் கருத்துக்களையும் கூற வேண்டுகிறேன்..

இப்படிக்கு

அன்புத் தோழி..

கனிதேவ்💕💕💕💕

மஞ்சள் சேர்த்த உறவே Where stories live. Discover now