மஞ்சள் சேர்த்த உறவே - 5

2.1K 54 1
                                    

பகுதி - 5

விஷாலியின் துள்ளல் , எங்கோ தொலைந்தது போலிருந்தது ர! ஆதிராவிற்கு.. தன் சகோதரனை பார்த்து வந்ததில் இருந்து, படுத்தே கிடக்கிறாள்‌‌. பள்ளிக்கு கிளம்பாமல்.. கேட்டதற்கு , வரவில்லை என்று பதில் அளித்துவிட்டாள் . அவள் போகாவிட்டாலும் யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. ஏனென்றால், இந்த மூன்றாண்டிகளில்  விடுப்பெடுக்காத மாணவி.. அவள் தோழி ஆதிராவிற்கு , காரணம் தெரிய வேண்டியிருந்தது.‌. ஆனால், கேட்க நேரமில்லை . அதனால் சரி , வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவளாய்.. பள்ளிக்கு சென்றுவிட்டாள் ‌.

இருவரால்.. சுழற்றி அடிக்கப்பட்ட நேற்றைய தினத்தை , தன் வாழ்நாளில் மறக்கவே முடியாது , என்று விசாலியின் நினைவுகளோ.. அடம்பிடித்தப்படி அவளின் மூலையை ஆக்ரமித்திருந்தது..

சூர்யாவும்.. உதய்யும்.. ஒன்று போல் , நேற்று.‌. விஷாலியை சுனாமி போல் சுழற்றியடித்திருக்க.. பாவம் அந்த மொட்டு விரியா மென்மலர்.. பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டவளாய்.. தன் கண்களை இறுக மூடி.. உடலை குறுக்கி.. இரு காதுகளையும் தன் கரத்தால் பொத்திக் கொண்டு.. படுத்துக் கிடந்தவள்.. எதற்கோ அஞ்சியவளாய் பரிதவிக்க.. கேட்ட வரை போதும்.. இனி என் செவிகளுக்கு.. எந்த ஓசையும் விழ வேண்டாம் என்று இறுக்கமாக காதை அடைத்தவாறு இருந்தாலும்.. இடமும் வலமுமாய் ஒரு சேர இரைந்துக் கொண்டிருக்கும்.. அவ்விருவரின் குரல்களில் இருந்து தப்பிக்க முடியாமல்.. தரையில் விழுந்த மீனாய் துடிதுடித்துக் கொண்டிருந்தாள்.

" எவன வேணா காதலி.. ஆனா எனக்கு பொண்டாட்டி.. நீதான்‌‌.." என்று சூர்யாவின் சீற்றம் ஒருபுறமும்..

" எவன் வேணாலும், உனக்கு தாலி கட்டலாம்.. ஆனா.. உனக்கு புருஷன் நான்தான்.." என்ற உதய்யின் உறுமலும்.. தன் இருபக்க காதுகளை அடைத்தவாறு இருப்பது போதாதென்று.. அவ்விருவரின் அத்துமீறிய தீண்டல்கள்.. அதற்கு அவள் உடல் மொழி அளித்த பதிலில் தான், பேதை நெஞ்சம் தடுமாறிக் கொண்டிருக்கிறது .

மஞ்சள் சேர்த்த உறவே Opowieści tętniące życiem. Odkryj je teraz