கண்டு💞கொண்டேன் -22
பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகள் வரிசையாக தெரியவே.. பத்மா வீட்டை தேடிச் சென்று கதவை தட்டினாள்...
கதிரின் அம்மா..
கதவை திறக்கவே முல்லை💞யை பார்த்ததும் அவருக்கு சந்தோசம் பொங்க.. வா..ம்மா எப்டி? இருக்க என்றார்..அவள் பதில் எதும் சொல்லாமல் வெறுமனே தலையசைத்து...எப்டி? இந்த அம்மா கிட்ட அவர் சொன்னது உண்மையா? பொய்யானு? கேக்க போறோம் என்ற தயக்கத்துடன் உள்ளே வந்தாள்..
வா முல்ல💞... காபி போடவா..? ஜூஸ் குடிக்கிறியா..? என்றாள் பத்மா..!!
எதும் வேண்டாம் என்றவளின் முகம் வாடி இருக்க...
ஹேய்..!!இன்னுமா இப்டியே இருக்க..
சீக்கிரம் சரியாகிடி.. முகம் களையாவே இல்ல பாரு... என்னனு கேட்டா சொல்லவும் மாட்ற..ஒரு நிமிஷம் பத்மா...நான் அந்த..ம்மா கிட்ட கொஞ்சம் பேசணும்..பேசிட்டு அப்புறம் என்னன்னு உன்கிட்ட சொல்றேன்..
என்னாச்சு..? என்று புரியாமல் பத்மா விழிக்க..
இவங்க கொஞ்ச நாளைக்கு முன்ன கதிர் வீட்டுக்கு வந்தாங்க.. இவங்க என்னை பாக்கல.. அப்....போ...
ஒரு நிமிஷம் ம்மா..நான் கொஞ்சம் பேசலாமா என்றார்..புன்னகையுடன்
இருவரும் அந்த பெண்மணியின் பக்கம் திரும்பி சொல்லுங்கம்மா.. என்றனர்..
நான் யார்னு நீங்க ரெண்டு பேருமே தெரிஞ்சிக்கணும்..ஆதரவில்லாதவளுக்கு அடைக்கலம் கொடுத்தவங்க கிட்ட என்னை பத்தி கண்டிப்பா சொல்லணும்..
முல்லை💞யின் பக்கம் திரும்பி..உனக்கு என்னை பத்தி கொஞ்சம் தெரியும்னு நினைக்கிறேன்..நீ என்கிட்ட பேச தயங்குறதுலயே அது தெரியுது.. என்னை பத்தி நானே சொல்றேன்..