கண்டு💞கொண்டேன் -51
அனைவரின் சுவாசமும் சீராக.. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அடுத்து என்ன? நடக்குமோ என்று பதைபதைப்பில் அமர்ந்திருந்தனர்.
மற்ற அனைவரும் கொஞ்சம் தெளிவாக.. முல்லை💞க்கு மட்டும் லேசாக மயக்கமாக இருந்தது..
கதிர் அவளை அணைத்து கொண்டு தலையை கோதி விட்டுக் கொண்டிருந்தான்..
நான் உங்கள ரொம்ப படுத்தி எடுக்குறேன்ல..
என் உயிரே நீ தானே... அப்புறம் உனக்காக கஷ்டபடாம..
அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
இப்ப கொஞ்சம் பரவா இல்லையா உனக்கு..
சீக்கிரம் இங்க இருந்து போகனுங்க..
எனக்கு பயமா இருக்கு..போலாம்.. அதுக்குள்ளே அந்த ரெண்டு பேருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துட்டு போலாம்...
எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க...
ஒண்ணும் இல்ல.. நான் இருக்கேன்ல பயப்படாத... என்றவன் செல்போன் சிணுங்க, எடுத்து காதுக்கு கொடுத்தான்..
சொல்லுடா கண்ணா..!!
மாமா..! நாங்க வந்துட்டோம்..
என்னது.?? என்று அதிர்ச்சியில் அவன் எட்டிப் பார்க்க...
மொத்த குடும்பத்துடன் அவன் பெரிய படகில் வந்து இருந்தான்..
.
நீங்கதான் துப்பாக்கி சத்தம் நின்னதும் வர சொன்னீங்க.. அதனால தான் இவங்கள எல்லாரையும் கூட்டிட்டு வந்தேன்..கதிர் தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டான்..
குமரன் கதிரை பார்த்து சந்தேகத்தில் அவனும் எட்டிப் பார்க்க... மொத்த குடும்பத்தையும் பார்த்தவன்...
இது என்னடா மச்சான்..!!?