பகலும் இரவும் போட்டியிட்டு வந்து செல்ல
எனது அறையில் நான் தனியே முடங்கிக்கடக்க
எத்தனை நாட்கள் ஆனதடா நண்பா
நாம் அனைவரும் சந்தித்து உறையாடி
உன் குறள் கேட்காமல் செவிகள் செயல் இழந்தன
எனோ என் செல்பேசி எனது எமனாயிற்று
உன்னை என்னை நெருக்கமாக்கிய அதே
உன்னை என்னை பிரிக்கும் கருவியானதே
உன்னோடு உலகம் சுற்ற ஆசைப்பட்டேன், இப்பொழுது
என் உலகமே நம் நினைவுகளை சுற்றுகிறது
நம் புகைப்படம் பார்க்கையில் இதழ் புன்னகை பூக்கும்
கண்கள் கண்ணீரை பொழிய செய்யும்
கோ- விட் அழிக்கும் முன் நினைவுகள் அழித்துவிடுமோ?
ஒரு முறை,ஓர் நாள் உன்னோடு கழித்துவிடமாட்டேனா?
YOU ARE READING
சந்திப்போமா நண்பா
PoetryThis is a tamil poem on the struggle between friends amidst this lockdown.