Puthinam
அன்புள்ள வாசகர்களே,
பற்சக்கரம் என் முதல் புதினம். இதற்கு முன் நான் சின்ன வயதில் சிறார் கதைகள் ஒன்றிரண்டு எழுதியதுண்டே தவிர பெரிதாக எழுத்து அனுபவம் இல்லை. பற்சக்கரத்தை எழுத ஆரம்பித்தபோது அது ஒரு இரண்டு பாகங்களாவது கொண்ட நீண்ட படைப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் எழுதினேன். உலகம் சிறு (short form content) படைப்புகளை நோக்கி போய் கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு நீண்ட (long form content) படைப்பை எழுதுவது கால விரயமோ என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஒரு கலை படைப்புக்குள் மூழ்கி திளைக்கும் (immersive experience) அனுபவத்தை, அப்படி திளைப்பதால் நம்மை நாமே கண்டடையும் உட்பார்வையையும் சிறிய படைப்புகளால் கொடுக்க முடியாது என்பது என் எண்ணமாக இருந்தது. அது போக யாரும் பார்க்கவில்லை என்பது போல் ஆடவேண்டும், யாரும் கேட்க வில்லை என்பது போல் பாட வேண்டும் (dance like no one is watching, sing like no one is listening) என்ற வரிசையில் யாரும் படிக்கவில்லை என்பது போல் எழுத வேண்டும் என்பது படைப்பாளிகளுக்கு கொடுக்கப்படும் அறிவுரை அல்லவா? ஆக, மூன்று வருடங்களுக்கும் மேலாக இப்படி எழுதப்பட்ட இந்த கதை கடைசி சில அத்தியாயங்களை எட்டியிருக்கிறது. இதுவரை ஓரளவு கோர்வையாக கதையை கொண்டு சென்ற திருப்தி இருக்கிறது. கையளவே ஆனபோதும் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களை பெற்றிருக்கும் பெருமிதம் இருக்கிறது. கூடவே முக்கியமான இந்த நிறைவு அத்தியாயங்களை எப்படி எழுதி முடிக்க போகிறோம் என்ற மலைப்பும் இருக்கிறது.
நிறைவு அத்தியாயங்களை நான் எழுதிக்கொண்டிருக்கும் போதே வாசகர்களுடன் உரையாடலாம் என்று ஒரு ஆசை தோன்றுகிறது. "Art belongs to the audience"அல்லவா? நீங்கள் கதை சம்பந்தமான கேள்விகள், விமர்சனங்கள் இருந்தால் எனக்கு அனுப்புங்கள். நான் அதற்கு மறுமொழி தருகிறேன். உங்கள் மதிப்பீடு எனக்கு கதையை மெருகூட்ட உதவியாக இருக்கும்.
Puthinam
@crayonshinnosukechan என் படைப்பை monetise செய்யும் எண்ணம் இல்லை. ஆசை இல்லாமல் இல்லை, எழுத்து படைப்பு பெரிதாக பணம் சம்பாதித்து தராது என்று அறிந்திருக்கிறேன். அதனால் அதற்கு தேவையில்லாமல் நேர விரயம் செய்ய வேண்டாம் என்று தோன்றுகிறது. இணையத்தில் ஒரு ஓரத்தில் சரியான காப்புரிமையுடன் வாசகர்களுக்கு என் படைப்பை open source-ஆக கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நேரம் கிடைக்கும்போது காப்புரிமை பற்றிய தகவல்களை அனுப்புங்களேன். உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி.
•
Reply
Puthinam
@crayonshinnosukechan உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. அவசரகதியில் அனைவருமே ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் நீங்கள் என் படைப்புக்கு அளித்திருக்கும் நேரத்தையும், கவனத்தையும் விலைமதிப்பில்லாத சன்மானமாக நினைக்கிறேன்.
•
Reply
crayonshinnosukechan
@Puthinam மொத்ததில் மிகவும் தரமான படைப்பு , ஒரு திரைப்படமாக எடுக்க ஏற்ற படைப்பு , இன்னும் 100 சாப்டர்கள் கடந்தாலும் இன்னும் சாப்டர்கள் இருந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கும் படைப்பு, செம்ம வேல்யூவான படைப்பு ! இந்த பற்சக்கரம் என்ற கதைக்களம்!
•
Reply