Puthinam

அன்பு வாசகர்களே, கடுமையான வேலை பளுவும், காலக்கெடுவும் இருக்கும் காரணத்தால், ஜூன் இறுதி வரை நாவலை தொடர முடியாத நிலையில் இருக்கிறேன். இதற்காக உங்கள் புரிதலையும், பொறுமையையும் கோருகிறேன். தொடர்ந்து வரும் மாதங்களில், அதாவது இந்த கோடை காலத்திற்குள் நாவலை எழுதி முடிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். வெகு சீக்கிரமே இந்த நாவலை ஒரு முழுமையடைந்த படைப்பாக வாசர்களான உங்களுக்கு சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன்.  இப்படிக்கு உங்கள் புதினம்.

crayonshinnosukechan

தோழமையே நீங்கள் சகோதரரா அல்லது சகோதரியா ? உங்களது கதை எழுதும் திறன் பிரமாதமாக இருக்கிறது. வெற்றிகரமான சாதனைகள் நிறைந்த வாழ்க்கை தங்களுக்கு அமையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Puthinam

அன்பு வாசகர்களே, கடுமையான வேலை பளுவும், காலக்கெடுவும் இருக்கும் காரணத்தால், ஜூன் இறுதி வரை நாவலை தொடர முடியாத நிலையில் இருக்கிறேன். இதற்காக உங்கள் புரிதலையும், பொறுமையையும் கோருகிறேன். தொடர்ந்து வரும் மாதங்களில், அதாவது இந்த கோடை காலத்திற்குள் நாவலை எழுதி முடிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். வெகு சீக்கிரமே இந்த நாவலை ஒரு முழுமையடைந்த படைப்பாக வாசர்களான உங்களுக்கு சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன்.  இப்படிக்கு உங்கள் புதினம்.

Puthinam

அன்புள்ள வாசகர்களே, பற்சக்கரம் நாவல் முடிவடைவதற்கு இன்னும் சில அத்தியாயங்களே இருக்கும் நிலைமையில், இணையத்தில் பற்சக்கரத்தை பற்றி விளம்பரம் செய்ய தொடங்கியுள்ளேன். புதினம் என்ற பெயரில் இன்ஸ்ட்டாகிராமிலும் , த்ரெட்சிலும்  கணக்கு தொடங்கி பதிவேற்றம் செய்ய தொடங்கியுள்ளேன். 
          இந்த நாவலின் கதை உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த பதிவுகளை படித்து நண்பர்களுடன் பகிர கோருகிறேன். "Art belongs to the audience" என்பார்கள். அதை நான் முழுவதுமாக நம்புகிறேன். உங்கள் ஆதரவை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.  இப்படிக்கு உங்கள் புதினம்.

Puthinam

அன்புள்ள வாசகர்களே 
          வாட்பேட் இன்னும் சில தினங்களுக்கு மேல்  தமிழ் கதைகளை பதிப்பிக்காது ஏன்று கேள்விபடுகிறேன்.
          இந்த காலக்கெடுக்குள் என்னால் 'பற்சக்கரம்' புதினத்தை முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. 
          இந்த கதைக்கு கையளவே வாசகர்கள் இருந்த போதும், அவர்களில் சிலர் கதையை ஆர்வத்தோடு தொடர்ந்து படித்து வந்தீர்கள். 
          மீதி கதையை உங்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பதற்கான யோசனைகளை வரவேற்கிறேன்.
          நீங்கள் இதுவரை காட்டிய ஆதரவுக்கு நன்றி!
           இப்படிக்கு, 
          புதினம்.

Puthinam

புதிய வாசகர்களே,  
          
          கதைக்குள் நுழையும் முன் கதையை பற்றிய சில குறிப்புகள் 
          
          1.  இது இரண்டு தலைமுறைகளின் கதை. கதை பெரும்பாலும் நேர்கோட்டில் பயணித்தாலும், அங்கங்கே நினைவுகளாலும்,  உரையாடல்களாலும் பின்நோக்கியும் இந்த கதை பயணிக்கும். சிலநேரம் சில கதாபாத்திரங்களின் மூலம் கனவுலகிலும் சஞ்சரிக்கும். ஒரே நிகழ்வை வெவ்வேறு மனிதர்கள் எவ்வாறு  நினைவு கூறுகிறார்கள் என்றும், ஒரே நிகழ்ச்சியை வெவ்வேறு மனிதர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்றும் சொல்ல முயன்றிருக்கிறேன்.  இப்படியான கதை சொல்லும் யுக்தி ரசிக்கும் படியாக இருக்கும் என்று  நம்புகிறேன். (கதையின் நான்காவது அத்தியாயத்திலாவது நீங்கள் இந்த கதை இரண்டு கால வெளியில் எழுதப்பட்டுள்ளதை புரிந்து கொள்ளவீர்கள் என்று அனுமானிக்கிறேன்  (அப்படி புரிந்த கொள்ள வில்லையென்றால் நான் என் கதை சொல்லும் பாணியை திருத்திக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம்)).
          
          2. இக்கதை, காதலை மட்டும் பேசும் கதை இல்லை எனினும் காதலை மையப்படுத்தி எழுதப்பட்டது. அதுபோக இந்த கதையில் குடும்ப வாழ்க்கை, தொழில், நட்பு, உறவு  என்று பல்வேறு உணர்வுகளையும் முன்வைக்கிறேன். இந்த கதையை வாசிப்பது, நடைமுறை வாழ்க்கையின் அலுப்பிலிருந்து ஒரு விடுப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயல்பு வாழ்க்கைக்கு அந்நியமான மேட்டுக்குடி வாழ்க்கையை கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறேன்.  கதாநாயகனோ, கதாநாயகியோ இவர்கள் தான் என்று சொல்ல முடியாதபடிக்கு ஆங்காங்கேயும், அவ்வப்போதும்  வெவ்வேறு கதாபாத்திரங்கள் கதையை  தூக்கி செல்கிறார்கள்.
          
          3. கதையின் உரையாடல்கள் தூய தமிழில் எழுதப்பட்டிருக்கும். கதாபாத்திரங்கள் பல்வேறு கால நிலையில், ஆங்கிலம், தமிழ், கொங்கணி, மராத்தி, சிந்தி என பல்வேறு மொழி பேசுபவர்களாக இருப்பதால் வழக்கு மொழியில் எழுதும் வாய்ப்பு இல்லை. வழக்கு தமிழில்  கதைகள் படித்து பழக்கப்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில், இந்த தூய தமிழ் உரையாடல்கள் சற்று உறுத்தலாக இருக்கும். ஆனாலும் நீங்கள் தொடர்ந்து கதையை படிக்கும்போது அது உங்களுக்கு பழகிவிடும். 
          
          4. வாசகர்களின் பின்னூட்டம்  கதையை மேற் கொண்டு செல்வதற்கு எனக்கு ஊக்கம் கொடுக்கும்.  பிடித்த அத்தியாயங்களுக்கு நட்சத்திர குறியை பரிசளித்தால் மகிழ்வேன்.
          
          உங்களுக்கு இந்த கதை ஒரு நல்ல வாசிப்பு அனுபவமாக இருக்க வேண்டும் என்ற ஆசையுடன், 
          உங்கள் கதைசொல்லி, 
          புதினம்