Puthinam

அன்புள்ள வாசகர்களே, 
          	பற்சக்கரம் என் முதல் புதினம். இதற்கு முன் நான் சின்ன வயதில் சிறார் கதைகள் ஒன்றிரண்டு எழுதியதுண்டே தவிர பெரிதாக எழுத்து அனுபவம் இல்லை. பற்சக்கரத்தை எழுத ஆரம்பித்தபோது அது ஒரு இரண்டு பாகங்களாவது கொண்ட நீண்ட படைப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் எழுதினேன். உலகம் சிறு (short form content)  படைப்புகளை  நோக்கி போய் கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு நீண்ட (long form content) படைப்பை எழுதுவது கால விரயமோ என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஒரு கலை படைப்புக்குள் மூழ்கி திளைக்கும் (immersive experience) அனுபவத்தை, அப்படி திளைப்பதால் நம்மை நாமே கண்டடையும் உட்பார்வையையும்  சிறிய படைப்புகளால் கொடுக்க முடியாது என்பது என் எண்ணமாக இருந்தது. அது போக யாரும் பார்க்கவில்லை என்பது போல் ஆடவேண்டும், யாரும் கேட்க வில்லை என்பது போல் பாட வேண்டும் (dance like no one is watching, sing like no one is listening) என்ற வரிசையில் யாரும் படிக்கவில்லை என்பது போல் எழுத வேண்டும் என்பது படைப்பாளிகளுக்கு கொடுக்கப்படும் அறிவுரை அல்லவா? ஆக, மூன்று வருடங்களுக்கும் மேலாக இப்படி எழுதப்பட்ட இந்த கதை கடைசி சில அத்தியாயங்களை எட்டியிருக்கிறது. இதுவரை ஓரளவு கோர்வையாக கதையை கொண்டு சென்ற திருப்தி இருக்கிறது. கையளவே ஆனபோதும் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களை பெற்றிருக்கும் பெருமிதம் இருக்கிறது. கூடவே முக்கியமான இந்த நிறைவு அத்தியாயங்களை எப்படி எழுதி முடிக்க போகிறோம் என்ற மலைப்பும் இருக்கிறது. 
          	
          	நிறைவு அத்தியாயங்களை நான் எழுதிக்கொண்டிருக்கும் போதே வாசகர்களுடன் உரையாடலாம் என்று ஒரு  ஆசை தோன்றுகிறது.  "Art belongs to the audience"அல்லவா? நீங்கள் கதை சம்பந்தமான கேள்விகள், விமர்சனங்கள் இருந்தால் எனக்கு அனுப்புங்கள். நான் அதற்கு மறுமொழி தருகிறேன். உங்கள் மதிப்பீடு எனக்கு கதையை  மெருகூட்ட உதவியாக இருக்கும்.

Puthinam

@crayonshinnosukechan  என் படைப்பை monetise செய்யும் எண்ணம் இல்லை. ஆசை இல்லாமல் இல்லை, எழுத்து படைப்பு பெரிதாக பணம் சம்பாதித்து தராது என்று அறிந்திருக்கிறேன். அதனால் அதற்கு தேவையில்லாமல் நேர விரயம் செய்ய வேண்டாம் என்று தோன்றுகிறது.  இணையத்தில் ஒரு ஓரத்தில் சரியான காப்புரிமையுடன் வாசகர்களுக்கு என் படைப்பை open source-ஆக கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நேரம் கிடைக்கும்போது காப்புரிமை பற்றிய தகவல்களை அனுப்புங்களேன். உங்கள் ஆலோசனைகளுக்கு  மிக்க நன்றி.
Reply

Puthinam

@crayonshinnosukechan உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. அவசரகதியில் அனைவருமே ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் நீங்கள் என்  படைப்புக்கு அளித்திருக்கும் நேரத்தையும், கவனத்தையும் விலைமதிப்பில்லாத சன்மானமாக நினைக்கிறேன்.
Reply

crayonshinnosukechan

@Puthinam மொத்ததில் மிகவும் தரமான படைப்பு , ஒரு திரைப்படமாக எடுக்க ஏற்ற படைப்பு , இன்னும் 100 சாப்டர்கள் கடந்தாலும் இன்னும் சாப்டர்கள் இருந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கும் படைப்பு, செம்ம வேல்யூவான படைப்பு ! இந்த பற்சக்கரம் என்ற கதைக்களம்!
Reply

Puthinam

அன்புள்ள வாசகர்களே, 
          பற்சக்கரம் என் முதல் புதினம். இதற்கு முன் நான் சின்ன வயதில் சிறார் கதைகள் ஒன்றிரண்டு எழுதியதுண்டே தவிர பெரிதாக எழுத்து அனுபவம் இல்லை. பற்சக்கரத்தை எழுத ஆரம்பித்தபோது அது ஒரு இரண்டு பாகங்களாவது கொண்ட நீண்ட படைப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் எழுதினேன். உலகம் சிறு (short form content)  படைப்புகளை  நோக்கி போய் கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு நீண்ட (long form content) படைப்பை எழுதுவது கால விரயமோ என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஒரு கலை படைப்புக்குள் மூழ்கி திளைக்கும் (immersive experience) அனுபவத்தை, அப்படி திளைப்பதால் நம்மை நாமே கண்டடையும் உட்பார்வையையும்  சிறிய படைப்புகளால் கொடுக்க முடியாது என்பது என் எண்ணமாக இருந்தது. அது போக யாரும் பார்க்கவில்லை என்பது போல் ஆடவேண்டும், யாரும் கேட்க வில்லை என்பது போல் பாட வேண்டும் (dance like no one is watching, sing like no one is listening) என்ற வரிசையில் யாரும் படிக்கவில்லை என்பது போல் எழுத வேண்டும் என்பது படைப்பாளிகளுக்கு கொடுக்கப்படும் அறிவுரை அல்லவா? ஆக, மூன்று வருடங்களுக்கும் மேலாக இப்படி எழுதப்பட்ட இந்த கதை கடைசி சில அத்தியாயங்களை எட்டியிருக்கிறது. இதுவரை ஓரளவு கோர்வையாக கதையை கொண்டு சென்ற திருப்தி இருக்கிறது. கையளவே ஆனபோதும் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களை பெற்றிருக்கும் பெருமிதம் இருக்கிறது. கூடவே முக்கியமான இந்த நிறைவு அத்தியாயங்களை எப்படி எழுதி முடிக்க போகிறோம் என்ற மலைப்பும் இருக்கிறது. 
          
          நிறைவு அத்தியாயங்களை நான் எழுதிக்கொண்டிருக்கும் போதே வாசகர்களுடன் உரையாடலாம் என்று ஒரு  ஆசை தோன்றுகிறது.  "Art belongs to the audience"அல்லவா? நீங்கள் கதை சம்பந்தமான கேள்விகள், விமர்சனங்கள் இருந்தால் எனக்கு அனுப்புங்கள். நான் அதற்கு மறுமொழி தருகிறேன். உங்கள் மதிப்பீடு எனக்கு கதையை  மெருகூட்ட உதவியாக இருக்கும்.

Puthinam

@crayonshinnosukechan  என் படைப்பை monetise செய்யும் எண்ணம் இல்லை. ஆசை இல்லாமல் இல்லை, எழுத்து படைப்பு பெரிதாக பணம் சம்பாதித்து தராது என்று அறிந்திருக்கிறேன். அதனால் அதற்கு தேவையில்லாமல் நேர விரயம் செய்ய வேண்டாம் என்று தோன்றுகிறது.  இணையத்தில் ஒரு ஓரத்தில் சரியான காப்புரிமையுடன் வாசகர்களுக்கு என் படைப்பை open source-ஆக கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நேரம் கிடைக்கும்போது காப்புரிமை பற்றிய தகவல்களை அனுப்புங்களேன். உங்கள் ஆலோசனைகளுக்கு  மிக்க நன்றி.
Reply

Puthinam

@crayonshinnosukechan உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. அவசரகதியில் அனைவருமே ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் நீங்கள் என்  படைப்புக்கு அளித்திருக்கும் நேரத்தையும், கவனத்தையும் விலைமதிப்பில்லாத சன்மானமாக நினைக்கிறேன்.
Reply

crayonshinnosukechan

@Puthinam மொத்ததில் மிகவும் தரமான படைப்பு , ஒரு திரைப்படமாக எடுக்க ஏற்ற படைப்பு , இன்னும் 100 சாப்டர்கள் கடந்தாலும் இன்னும் சாப்டர்கள் இருந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கும் படைப்பு, செம்ம வேல்யூவான படைப்பு ! இந்த பற்சக்கரம் என்ற கதைக்களம்!
Reply

crayonshinnosukechan

தோழமையே நீங்கள் சகோதரரா அல்லது சகோதரியா ? உங்களது கதை எழுதும் திறன் பிரமாதமாக இருக்கிறது. வெற்றிகரமான சாதனைகள் நிறைந்த வாழ்க்கை தங்களுக்கு அமையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Puthinam

@crayonshinnosukechan மனமார்ந்த நன்றி. நீங்கள் என் கதையை ரசிப்பது எனக்கு படைப்பூக்கத்தை தருகிறது. கதாசிரியர் ஆணா, பெண்ணா என்பதை எழுத்தின் பாணியை கொண்டு அனுமானிக்க முடியும் என்பார்கள். அதனால் அதை உங்கள் அனுமானத்திற்கு விடுகிறேன்.
Reply

Puthinam

புதிய வாசகர்களே,  
          
          கதைக்குள் நுழையும் முன் கதையை பற்றிய சில குறிப்புகள் 
          
          1.  இது இரண்டு தலைமுறைகளின் கதை. கதை பெரும்பாலும் நேர்கோட்டில் பயணித்தாலும், அங்கங்கே நினைவுகளாலும்,  உரையாடல்களாலும் பின்நோக்கியும் இந்த கதை பயணிக்கும். சிலநேரம் சில கதாபாத்திரங்களின் மூலம் கனவுலகிலும் சஞ்சரிக்கும். ஒரே நிகழ்வை வெவ்வேறு மனிதர்கள் எவ்வாறு  நினைவு கூறுகிறார்கள் என்றும், ஒரே நிகழ்ச்சியை வெவ்வேறு மனிதர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்றும் சொல்ல முயன்றிருக்கிறேன்.  இப்படியான கதை சொல்லும் யுக்தி ரசிக்கும் படியாக இருக்கும் என்று  நம்புகிறேன். (கதையின் நான்காவது அத்தியாயத்திலாவது நீங்கள் இந்த கதை இரண்டு கால வெளியில் எழுதப்பட்டுள்ளதை புரிந்து கொள்ளவீர்கள் என்று அனுமானிக்கிறேன்  (அப்படி புரிந்த கொள்ள வில்லையென்றால் நான் என் கதை சொல்லும் பாணியை திருத்திக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம்)).
          
          2. இக்கதை, காதலை மட்டும் பேசும் கதை இல்லை எனினும் காதலை மையப்படுத்தி எழுதப்பட்டது. அதுபோக இந்த கதையில் குடும்ப வாழ்க்கை, தொழில், நட்பு, உறவு  என்று பல்வேறு உணர்வுகளையும் முன்வைக்கிறேன். இந்த கதையை வாசிப்பது, நடைமுறை வாழ்க்கையின் அலுப்பிலிருந்து ஒரு விடுப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயல்பு வாழ்க்கைக்கு அந்நியமான மேட்டுக்குடி வாழ்க்கையை கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறேன்.  கதாநாயகனோ, கதாநாயகியோ இவர்கள் தான் என்று சொல்ல முடியாதபடிக்கு ஆங்காங்கேயும், அவ்வப்போதும்  வெவ்வேறு கதாபாத்திரங்கள் கதையை  தூக்கி செல்கிறார்கள்.
          
          3. கதையின் உரையாடல்கள் தூய தமிழில் எழுதப்பட்டிருக்கும். கதாபாத்திரங்கள் பல்வேறு கால நிலையில், ஆங்கிலம், தமிழ், கொங்கணி, மராத்தி, சிந்தி என பல்வேறு மொழி பேசுபவர்களாக இருப்பதால் வழக்கு மொழியில் எழுதும் வாய்ப்பு இல்லை. வழக்கு தமிழில்  கதைகள் படித்து பழக்கப்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில், இந்த தூய தமிழ் உரையாடல்கள் சற்று உறுத்தலாக இருக்கும். ஆனாலும் நீங்கள் தொடர்ந்து கதையை படிக்கும்போது அது உங்களுக்கு பழகிவிடும். 
          
          4. வாசகர்களின் பின்னூட்டம்  கதையை மேற் கொண்டு செல்வதற்கு எனக்கு ஊக்கம் கொடுக்கும்.  பிடித்த அத்தியாயங்களுக்கு நட்சத்திர குறியை பரிசளித்தால் மகிழ்வேன்.
          
          உங்களுக்கு இந்த கதை ஒரு நல்ல வாசிப்பு அனுபவமாக இருக்க வேண்டும் என்ற ஆசையுடன், 
          உங்கள் கதைசொல்லி, 
          புதினம்