இதுவரை : முல்லை மனதில் கதிர்
இனி :
முல்லை வீட்டை அடைந்ததும் மகா வந்து, மாயன் ஊருக்கு போவதால் அடுத்த வாரம் கதையை தருவது கடினம், முடிந்தால் தான் வந்து வாங்கி கொள்வதாகவும், ஒரு வேளை தானும் ஊருக்கு செல்லும் சூழல் வந்தால் நீ தினமும் செல்லும் கோவிலில் கதிரேசனை அனுப்பி வாங்கி கொள்வதாக கூற, முல்லை மறுத்து விட்டாள்....
மாயன் வந்த பின்பே கதையை தொடரலாம் என சொல்லிவிட்டாள். மஹாவும் சரி என சொல்லிவிட்டு செல்ல முல்லைக்கு மனதிற்குள் மிகவும் வேதனை பட்டாள், இன்று தான் கதிர் பற்றி நினைத்து அவனிடம் நெருங்க நினைக்கும் போது, அவனுடன் அவளுக்கு உண்டான கதை தொடர்பு தற்காலிகமாக நிறுத்த படுவது ஒரு பிரிவை உணர்த்தியதாக உணர்ந்தாள், நிச்சயம் பிரிவின் பின் சேர்வோம் என நம்பிக்கை கொண்டாள்....
கதிரும் முல்லையும் ஒருவரை ஒருவர் நினைத்து கொண்டு அந்த இரவை கடந்தனர். அடுத்த நாள் விடிந்தது. Lak இன்று கோவிலுக்கு போக வேண்டும் என சொல்லி ஜீவாவை அழைத்தாள், ஜீவா தான் bank கு செல்ல வேண்டும் என கூற, கதிர் தனக்கு கோவிலில் delivery இருப்பதால் அப்போது வந்து அழைத்து செல்வதாக கூறினார்...
PS brothers கடைக்கு செல்ல, கதிர் கோவிலுக்கு குடுக்க வேண்டிய பொருட்களை எடுத்து கொண்டு lak யும் அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றான். மடப்பள்ளியில் சென்று சாமான்களை சேர்த்து விட்டு lak இடம் வந்து பிரார்த்தனை செய்து விட்டு இருவரும் மரத்தடியில் அமர்ந்தனர்...
K: எதுக்கு மா இன்னைக்கு திடீர்னு கோவிலுக்கு...
L: உனக்காக தான் டா, உனக்கு படிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி தந்த சாமிக்கு நன்றி சொல்லணும் னு தோணுச்சு...
K:mv: அப்படியே முல்லைக்கும் நன்றி சொல்லணும் மா, சீக்கிரமே முல்லை கிட்ட பேசிட்டு உங்க கிட்ட கூட்டிட்டு வரேன்...
L: அதோட நாளைக்கு நித்யாவை போய் பார்க்கலாம் னு இருக்கேன் டா, சாமி கிட்ட வேண்டிட்டு போய் ஜெகா கிட்ட சொல்லி நித்யா அப்பாக்கு போன் பண்ணலாம் னு இருக்கேன்...
YOU ARE READING
கதிரின் அகமுடையாள்
FanfictionKm உறவினர் அல்ல, ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை, கடிதத்தில் மட்டும் அறிமுகம் உண்டு