உயிரில் கலந்த உறவே...

1.6K 65 1
                                    

யாழினி அன்று காலை சந்தோசமாக எழுந்தாள். எழுந்தவள் குளியலறைக்குள் நுழைந்து குளித்து முடித்து வந்து உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். அவளருகில் வந்த விதார்த் இதைப் பிடி இது உனக்குத் தான் என்று ஒரு கிப்ட் பாக்ஸை நீட்டினான். என்ன இது என்றவளிடம் தெரியலை நேத்து எங்க வீட்டுக்கு போயிருந்தேன் அப்பா இதை உன்கிட்ட கொடுக்கச் சொன்னாரு என்றான். அந்த பாக்ஸை ஓபன் செய்து பார்த்தாள் அதில் விதார்த் என்று பெயர் பொறிக்கப் பட்ட டாலருடன் கூடிய அழகிய செயின் இருந்தது. அதை பார்த்தவள் அதை எடுத்து கழுத்தில் அணிந்து கொண்டாள். அவள் திருமணம் முடிந்த மறுநாள் கேட்ட பரிசு இது ஆனால் இன்று இது தேவையா என்று அவளே யோசிக்கும் படி அல்லவா அவளது வாழ்வு இருக்கிறது. ஆனாலும் அந்த செயினில் தன்னவனின் பெயர் இருப்பதால் அந்த பெயரும் அவன் கட்டிய தாலியோடு சேர்ந்து நெஞ்சாங்கூட்டில் உரசுவது அவளுக்கு அலாதி இன்பம் அதனால் அதை அணிந்து கொண்டாள். இது என்ன ஏன்
இப்படி என் பெயர் போட்ட செயின் அவர்கிட்ட கேட்ட என்றான். நீங்க தானே என் புருசன்அப்போ உங்க பெயர் போட்ட செயின் நான் போடுறதில் என்ன தப்பு என்றாள். என்ன புருசன் நம்ம கல்யாணம் சட்டப்படி என்று கூற வந்தவனிடம் இன்றைக்கு எனக்கு பிறந்தநாள். இனியும் நான் மைனர் பொண்ணு இந்த கல்யாணம் செல்லாது அது இதுனு கதை சொல்லாதிங்க என்றவள்  அமைதியாக உணவை சமைத்தாள். காலிங் பெல் சத்தம் கேட்கவும் அவன் சென்று கதவைத் திறந்தான். ஒரு வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் நின்றிருக்க யார் வேண்டும் என்றான் விதார்த். யாழினி அம்மா என்று அவன் கூறவும் சரவணா வாங்க என்று அவள் குரல் கொடுக்க டிரைவர் சரவணன் வீட்டிற்குள் வந்தான். சின்னம்மா அம்மா இதை உங்கள் கிட்டையும், மாப்பிள்ளை சார் கிட்டையும் கொடுக்கச் சொன்னாங்க என்றான். ரொம்ப தாங்க்‌ஸ் சரவணா என்றவளிடம் ஒரு சின்ன கிப்ட் பாக்ஸை நீட்டினான். என்ன இது என்றவளிடம் என்னோட கிப்ட் சின்னம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றான் சரவணன். தாங்க்ஸ் என்றவள் அந்த கிப்ட்டை பிரிக்க அழகான கண்ணாடி வளையல்கள் இருக்கவும் வாவ் சூப்பர் எனக்கு பிடித்த கலர் என்று அவள் கூறிவிட்டு பத்து நிமிசம் இருங்க ரெடியாகிட்டு வரேன் நாம காலேஜ் போகலாம் என்றவள் கிட்சனில் வேலையை முடித்து விட்டு அறைக்குள் நுழைந்தாள்.

உயிரில் கலந்த உறவே...Where stories live. Discover now