என்ன மாமா நீங்க இப்படி இருக்கிங்க பாவம் ராஷ்மிகா அவங்க முன்னாடியே என் கூட இவ்வளவு நெருக்கமா நீங்க இருந்திங்கன்னா அவங்க மனசு எவ்வளவு வேதனைப் படும் என்றாள் யாழினி. அவள் என்னை மறந்துட்டு வேற ஒரு வாழ்க்கையை வாழனும் அப்படிங்கிறதுக்காக தான் யாழிமா அவள் முன்னாடி உன் கூட ரொம்ப நெருக்கமா இருந்தேன் என்றவன் அன்று நடந்த நிகழ்வை நினைத்து பார்த்தான்.
யாழினியுடன் தான் வாழ்ந்து விட்ட பிறகு அவளை ஒதுக்குவது தவறு இனி என் வாழ்க்கை, காதல் எல்லாமே யாழினி தான் அதனால் ராஷ்மிகாவிடம் பேச நினைத்தவன் அவள் எண்ணிற்கு போன் செய்ய அவள் அவனது எண்ணை ப்ளாக் செய்து விட்டதால் அவனால் அவளிடம் பேச முடியவில்லை.
அவளைத் தேடி அவளது ஹாஸ்டலிற்கே சென்று விட்டான். அவளும் வேறு வழி இல்லாமல் அவனிடம் பேச வந்தாள். சொல்லு விதார்த் என்றவளிடம் என்னை மன்னிச்சுரு ராஷ்மி என்றவன் யாழினியுடன் நடந்த தன்னுடைய வாழ்வின் அடுத்தகட்டத்தை கூறினான். சரியோ தப்போ யாழினி கூட வாழ்ந்துட்டேன். அது போதையில் நடந்ததா இருந்தாலும் நடந்தது இல்லை என்று ஆகாது அதனால் என் வாழ்க்கை இனி அவளோட தான் அதனால் ப்ளீஸ் நாம பிரிஞ்சுருவோம் ராஷ்மிகா. நான் உனக்கு பண்ணுனது பெரிய துரோகம் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்றவன் அவளது காலில் விழப்போக விதார்த் என்ன பண்ணுற என்றவள் அவனைப் பிடித்து நிறுத்தினாள். தப்பில்லை ராஷ்மி நான் பண்ணுனது துரோகம் உன்னை காதலிச்சுட்டு என்னோட சூழ்நிலையால அவளை கல்யாணம் பண்ணிகிட்டு அதை உன் கிட்ட மறைத்து எல்லாமே தப்பு அதற்கு மன்னிப்பு கேட்க தான் வந்தேன் என்றான். போதையில் நடந்த ஒரு விபத்து தானே அதற்காக நாம ஏன் பிரியனும் என்றவளிடம் உனக்கு புரியலை ராஷ்மி கற்புங்கிறது பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் இருக்கு நீங்க எப்படி உங்களை முழுவதும் உங்க கணவன் கிட்ட கொடுக்கனும்னு நினைக்கிறிங்களோ அப்படித் தான் நானும் என்னை முழுசா ஒருத்திக்கு மட்டும் தான் கொடுக்கனும்னு ஆசைப் பட்டேன். அந்த ஒருத்தி நீயா இருக்கனும்னு தான் நானும் நினைத்தேன். சந்தர்ப்ப சூழ்நிலையால் யாழினி எனக்கு மனைவியா கிடைத்தாள். அப்பவும் என் மனசுல நீ தான் இருந்த எப்போ யாழினிக்கு வலிப்பு வந்து நுரை தள்ளி அவள் துடிச்சதைப் பார்த்தேனோ அப்ப இருந்து என் மனசு தடுமாற ஆரம்பிச்சுருச்சு. அந்த பொண்ணுக்கு ஒன்னுனா ஏன் என் மனசு துடிக்குதுனு யோசிச்சேன். அப்பறம் யாழினி என்கிட்ட ரொம்ப நெருங்கி வர ஆரம்பித்தாள். என்னையவே அறியாமல் உன்னையும் அவளையும் கம்பேர் பண்ணி பார்க்க ஆரம்பித்தேன். உனக்கு நான் மட்டும் போதும் அப்படி நினைக்கிற ஆனால் யாழினி அப்படி இல்லை அவளுக்கு என்னோட சேர்த்து என் மொத்த குடும்பமும் வேண்டும் என் அக்கா கல்யாணம் ஆகி ஐந்து வருடம் கழித்து கர்ப்பமா இருக்காள் இது எவ்வளவு பெரிய சந்தோசம் தெரியுமா அதை உன் கிட்ட ஆசையா சொன்னேன் ராஷ்மி. நீ அதை தேவை இல்லாத விசயம்னு சொல்லிட்ட அதை யாழினி எப்படி கொண்டாடுனா தெரியுமா இப்படி சின்னச் சின்ன விசயங்கள் அவள் தான் எனக்கானவள்னு உணர்த்திட்டே இருந்தது. எல்லாத்துக்கும் மேல எங்களுக்குள்ள நடந்த இந்த தாம்பத்யம் யாழினி தான் என்னோட வாழ்க்கைனு புரிய வைத்தது என்னை மன்னிச்சுரு ராஷ்மி என்றான் விதார்த். அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்து பொறுக்கி அவள் கூட படுத்ததும் நான் வேண்டாமாடா என்று கேட்கத் துடித்த நாவையும், அடிக்கத் துணிந்த அடக்கியவள் சரி விதார்த் நீ உன் முடிவை சொல்லிட்ட சந்தோசமா இரு என்னை என்னால் பார்த்துக்க முடியும் என்று கூறி விட்டு கிளம்பினாள் ராஷ்மிகா. அதை நினைத்தவன் தன் கண்ணீரைத் துடைத்து விட்டு தன் மார்பில் தலைவைத்து குழந்தை போல் உறங்கும் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன் ஐ லவ் யூ யாழிமா என்று கூறிவிட்டு உறங்கினான்.
أنت تقرأ
உயிரில் கலந்த உறவே...
عاطفيةஎதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் முடிந்த கணவன் மனைவியின் வாழ்க்கை