6- ப்ரியமுடன் விஜய்

14 3 0
                                    

அத்தியாயம் - 6

ப்ரியமுடன் விஜய்

அன்னம்மாள் கூறியதுப் போல, பொன்னுத்தாயும் அவளும் சேர்ந்து மெட்ராஸிலிருக்கும் கபீர் பாயைப் சந்திக்கச் சென்றனர்.

தன் மகள் அமராவதியை, மெட்ராஸில் இருக்கும் தன் சொந்தத்தின் வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு இருவரும் கபீர் பாயின் இருப்பிடத்திற்குச் சென்றனர். அரை மணி நேர காத்திருப்பிற்கு பிறகு கபீர் பாயின் அறைக்குச் சென்றனர் அன்னம்மாளும், பொன்னுத்தாயும்.

"வணக்கம் பாய்..." என்று பாயிடம் நமஸ்கரித்த அன்னம்மாள், அவரிடம்... "பாய், இது என் தோழி... பேரு பொன்னுத்தாயி..." என்று தட்டுத் தடுமாறி கூறவும் பொன்னுத்தாயும் பாயைப் பார்த்து நமஸ்கரிக்க...

"இவங்கள எனக்கு தெரியும் அன்னம்மா." என்று கபீர் பாய் ஒரு மெல்லிய புன்னகையோடு கூறியவர், "ரெண்டுப் பேரும் உக்காருங்க. என்ன விசயமா வந்திருக்கீங்க?" என்று அவர் வினவவும் அந்த இரு பெண்மார்களும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, பின் அன்னம்மாளே அவர்கள் அங்கு வந்ததற்கான காரணத்தைக் கூறினாள்.

"பாய், நேத்து பொன்னு வீட்டுல அந்த கருப்பு உருவம் அவளோட அப்பா உருவத்துல வந்து அவள் மகள் அமராவதிய கொண்டுப் போக பார்த்துச்சு. நீங்க சொன்னதுப்போல வெள்ளப்பூண்டு மாலைய அவள் கழுத்துல போட்டு இப்போதைக்கு தப்பிக்க வச்சுட்டேன். ஆனால், இது தீர்வு இல்லைனு எனக்கும் பொன்னுக்கும் தோணுது. முதல்ல இந்த மாதிரி எங்களுக்கு நடக்க காரணம் என்ன? எதனால எங்களுக்கு இப்படிலாம் நடக்குது? இன்னும் எத்தன நாளுக்கு தான் நாங்க அந்த கருப்பு உருவத்த கண்டு ஓடுவோம்? இதுக்கு நிரந்தர தீர்வே இல்லையா? இப்போவாச்சும் எங்களுக்கு என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்கணும் பாய்." என்று தங்கள் பிள்ளைகள் மூவரும் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் பயத்தில் அன்னம்மாள் பேசிமுடிக்கவும், ஒரு நிமிடம் அவரை ஆழமாகப் பார்த்த கபீர் பாய் பொன்னம்மாளையும் ஒரு முறை பார்க்க, அவளது முகத்திலும் பயம் குடிக்கொண்டிருப்பதைக் கவனித்தவர்,

மிருதனின் அசுரம் ( ரிலே கதை -3)Where stories live. Discover now