13 ரிஷியின் அம்மா
மறுநாள்
ரிஷியுடன் பேசி தீர்த்து விடுவது என்ற தீர்மானத்தோடு கல்லூரிக்கு வந்தாள் மதுமிதா. ஒரு பெரிய மரத்தடியில் போடப்பட்டிருந்த மேடையில், ரிஷியும் அவனது நண்பர்களும் அமர்ந்திருப்பதை கண்ட அவள், அவர்களை நோக்கி நடந்தாள். அவள் தங்களை நோக்கி வருவதை கண்ட பாலா,
"மச்சான், யாரும் திரும்பி பார்க்காதீங்க" என்றான்.
"என்ன விஷயம் சொல்லு" என்றான் ரிஷி.
"மது நம்ம கிட்ட வரா"
"ஓஹோ..."
"நம்ம கிட்டயிருந்து பத்தடி தூரத்துல இருக்கா"
ரிஷி ஆரம்பித்தான்,
"என்னோட மாமனாரும் மாமியாரும் இவ்வளவு நல்லவங்களா இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" என்றான் சத்தமாக.
"நெஜமாவா சொல்ற?"
"ஆமாம், அப்படியே நம்ம மது மாதிரியே... என்னை அவ்வளவு நல்லா ட்ரீட் பண்ணாங்க"
தன் பெற்றோரை, அவன் மாமனார், மாமியார் என்று கூறியதை கேட்ட மதுமிதாவிற்கு, ஓங்கி அவன் தலையில் ஒரு குட்டு வைக்க வேண்டும் என்று தோன்றியது.
"அவங்க ரொம்ப ஸ்வீட். எங்க அப்பா மேல ரொம்ப மரியாதை வச்சிருக்காங்க"
"ரிஷி..." அவனை அழைத்தாள் மதுமிதா.
"பாரேன், இப்ப கூட எனக்கு மது என்னை கூப்பிடுற மாதிரியே தோணுது" என்றான் அவள் பக்கம் திரும்பாமல்.
"ரிஷி, நான் உன்னை உண்மையிலேயே கூப்பிட்டேன்" என்றாள் அவள்.
அவள் அங்கு வந்ததே தெரியாததை போல, தன் விழிகளை விரித்து, அவளை ஆச்சரியத்துடன் பார்த்த ரிஷி, அவளை நோக்கி ஓடினான்.
"நீ என்னை கூப்பிட்டியா?"
"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
"வாவ்... ரியலி?"
அவள் ஆமாம் என்று தலையசைக்க,
"சொல்லு டார்லிங்" என்றான்.
அவள் எரிச்சலுடன் கண்களை மூட, சிரித்துக் கொண்டான் ரிஷி.
YOU ARE READING
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️
Romanceஅவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்...