கதை நாயகன் :அருண்
கதை நாயகி : நித்யா
நாயகனின் தோழன் :கதிர்
நாயகியின் தோழி : ஆர்த்தி
முதல் சந்திப்பு❤:ஓர் இலை உதிர் காலம்,மாலை நேரம் சாலை முழுவதும் மஞ்சள் நிற பூக்கள் படர்ந்து இருக்க... சிறு சிறு மழை துளிகள் என்னை தீண்டிச் செல்ல யாரும் இல்லா பூங்காவின் ஓரத்தில் நான் அமர்ந்து இருக்க , ஓர் சிறு பிள்ளையை கையில் ஏந்தி சிரிப்பால் அவள் முகம் நிலா போல் ஐோலிக்க பெண்ணின் புடவை என்னை தீண்டியது .. மனம் உடைந்து போய் அமர்ந்து இருந்தேன்... ஆனால் அவளின் சிரிப்பு என்னை ஈர்த்தது..
மனதுக்குள் யார் இவள்?? இது வரை இவளை இந்த நகரில் பார்த்ததே இல்லை என்று உள்ளம் கேட்டது...
யார் இவள் என்று பார்க்க பின் தொடர ஆரம்பிற்கும் முன் அவள் அப்படியே மறைந்தள் ... அவளை பார்த்த நேரத்தில் என் துன்பங்கள் என்னை விட்டு செல்வது போல் ஒர் எண்ணம்... அந்த அமைதியிலும் அவள் மேல் இருந்த ஒரு வகை உணர்ச்சியிலும் அவ்வாறே வீடு திரும்பினேன்.. அன்று முழுவதும் எங்கு பார்த்தாலும் அந்த சிரிப்பின் சத்தம் கேட்டது... இரவு தூக்கத்தையும் பரித்து சென்றால்!! அதற்கு அர்த்தம் என்னவோ தெரியவில்லை!!.. மறு நாள் அவள் யார் என கண்டு பிடிக்க என்றும் இல்லாமல் தீவிரமாக காலையில் புறப்பட்டேன் .. தேர்வு கூட இவ்வளவு ஆர்வம் காட்டவில்லை நான் 😂😂.. முதல் முறையாக இவ்வளவு ஆர்வம் காட்ட என் அம்மா ஏன் டா இவ்வளவு சீக்கிரம் எங்க கிளம்பிட ? என்று கேட்டார்.. அவர் இடம் சொல்லவா முடியும் உன் மருமகளை பார்க்க போகிரேன் என்று, மனதுக்குள் கூறி விட்டு, இல்ல அம்மா ஒர் முக்கியமான வேலை இருக்கிறது என்று கூறிவிட்டு கிளம்பினேன்... காலையில் வேலை இல்லாதவன் போல் அவளுக்காக காத்திருந்தேன் ஆனால் அவளை பார்க்க முடியவில்லை.. நேரம் ஆயிற்று அவளை காணவில்லை.. சரி மாலையில் பார்த்து கொல்லலாம் என்று கூறியபடி அலுவலகத்திற்கு சென்றேன் ... அலுவலகத்திற்கு சென்று என் நண்பர் இடம் சொல்ல அவனை தேடினேன்... அவன் வந்ததும் அவனை இழுத்து சென்று நடந்த அனைத்தையும் கூறினேன்.. அதற்கு கதிர் என் டா இதை சொல்லவா சீக்கிரம் வர சொன்ன? .. ஆம்ம என்று சிரித்தேன்... யாராக இருக்கும் 🤔??.. என்று யோசிக்க, கதிர் வேலை பாருடா என்று சொல்ல, என் மனம் அதை மறுக்க, நான் அவளை நினைத்து கொண்டு இருந்தேன்..மாலை ஆயிற்று 5.00 மணிக்கு டான் என்று கிளம்பி அந்த பூங்காவிற்கு சென்றேன்.. காத்துக்கொண்டிருந்தேன்..
சூரியன் மறைந்த நிலவும் வந்துவிட்டது ஆனால் அவளை காணவில்லை.. மனம் உடைந்து போய் என் வாகனத்தை எடுக்க சென்றேன்.. திடீர் என ஒர் பெரிய இடி இடிக்க ஒர் நாய் குட்டி கிச்கிச் என்று சத்தமிட நான் திரும்பி பார்த்தேன். அவள் இடியைய் கண்டு பயந்து செவி மேல் கை வைத்து நின்றுகொண்டு இருந்தால்.. ஒர் கார் அவளை மோத வர நான் அவளை இழுக்க, யார் என்று தெரியாததால் அவள் என்னை அடிக்க, அதை வெக்கம் இல்லாமல் அவளை பார்த்து கொண்டு இருந்தேன்.. அவள் என்னை திட்டி செல்ல அது கூட அறியாமல் ரசித்து கொண்டு இருந்தேன்... அவள் போகும் வரை.. திடிர் என மழை பட பட என வந்தது அதில் தான் உணர்ந்தேன் அவள் கிளம்பிவிட்டால் என்று... அந்த ஆனந்தத்தில் வீடு திரும்பினேன்.. வீட்டில் எல்லா செயலையும் மாற்றி மாற்றி செய்து கொண்டு இருந்தேன்... அவள் நினைவில் ❤....கதை தொடரும் அடுத்த பக்கத்தில்!!!காத்திருங்கள் 😉