சோகத்தில் மூழ்கி இருந்த நிவேதாவைப் பார்க்க ரியாவும், VP யும் சென்றனர்.VP பெயர் V. பவித்ரன் .எல்லாரும் சுருக்கி VP என்று தான் அழைப்பர். அவர்கள் இருவரும் ' சிற்பி' என்ற பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிபவர்கள்.
நிவேதாவின் வீட்டிற்குள் நுழைந்தனர் ரியாவும் வீ.பி யும்.
வீட்டின் நுழைவாயிலில் சர்மினியின் படம் பெரியதாக பிரேம் போட்டு ,பெரிய மாலை அணிந்து வைக்கப்பட்டிருந்தது.
அதைப் பார்த்தபடியே இருவரும் உள்ளே நுழைந்தனர்.அங்கே நிவி (நிவேதா ) அவசரஅவசரமாக துணிகளை பீரோவில் வைத்துக் கொண்டிருந்தாள்.அப்பொழுது ,சட்டென்று ஒரு வெள்ளை துண்டு கீழே விழுந்தது.வீ.பி அதை எடுத்துக் கொடுத்தான்.மெலிதாக
கஷ்டப்பட்டு புன்னகையை பிடித்து முகத்தில் ஒட்டிக்கொண்டாள் நிவி.வீ.பி யும் பதிலுக்கு புன்னகைத்தான்."வாங்க உக்காருங்க ...என்ன விஷயம்...அக்காவுக்கு தெரிஞ்சவங்களா..."என்று மூக்கை உறிந்தாள்.
"நாங்க சிற்பி பத்திரிக்கைகாரங்க.உங்க அக்கா இறப்பு ல இருக்குற மர்மத்தைக் கண்டுபிடிக்கனும்.ரொம்ப interesting ஆ இருந்தா எங்க சேனல் ல episode ஆ போடுவாங்க.இதான் எங்க முத investigation .நீங்களும் கொஞ்சம். ஒத்துழைக்கனும்.உங்களுக்கு விருப்பம் இருந்தால்..."ரியா முடிப்பதற்குள் கண்கலங்கி விட்டாள் நிவி.
"எங்க அக்காவின் இறப்பு உங்களுக்கு ஒரு விளம்பர பொருள்.....ம்....பத்திரிக்கைக்காரங்க னா பத்திரிக்கைக்காரங்க தான்....ம் "
" என்ன இந்த பொம்பள விஜய் காந்த் மாதிரி பேசுது .ம் னு சொல்லு இத வச்சு பத்து episode ஓட்டலாம்."என்றான் வீ.பி
"உச் ....சூ...."
"உங்க அக்கா வோட சாவு இயற்கையானது இல்ல அது தெரிஞ்சும் நீங்க இப்படி பேசுறது....."என்றாள் ரியா."ம்ம் உங்களுக்கு பேசவா தெரியாது.நா ஒத்துழைக்கிறேன்"
என்று வேண்டா வெறுப்பாய் சொன்னாள் நிவி."சரி நாங்க அப்ப கிளம்புறோம்"இருவரும் கிளம்பினர்.
ஆபிஸை நோக்கிச் சென்றனர் இருவரும்.காரில் இருவரும் அமர்ந்திருந்தனர்.வீ.பி மெளனத்தை கிழித்து பேசத்தொடங்கினான்."என்னாவாம் அந்த நிவி அப்படி பேசுறா .அவங்க அக்கா எப்படி செந்தாங்க னு கண்டுப்பிடிக்குறதுக்கு thanks சொல்லாம,நம்மள!தரைகுறைவா எளக்காரமா பேசுறா "
YOU ARE READING
மரணமா ? மர்மமா ?
Fantasy#7 in thriller on 13/5/2018 #5 in mystery on 19/5/2018 #4 in fantasy on 24/6/2018 #3 in mystery on 25/6/2018 #1 in thriller on 26/11/2018 ரியா, vp. -'சிற்பி 'என்கிற பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிபவர்கள்.தொடர்ந்து வரும் மர்மமான கொலைகள்,இவர்களின் நிம்மதி...