ரயில் பயணத்தில்!

153 12 4
                                    


குட்டையும் நெட்டையுமாய் கட்டிட
பிம்பங்கள், ரயில் வேகத்தில் கானலாய்
தோன்றி மறைந்த அரை தூக்கத்தில்,
திடுமென எழுந்தான் அவலக் குரல் ஓசையில்.
பிச்சைக்காரன் என முகம் திருப்பிய நொடியில்,
உறைத்தார் " பிச்சை ஒன்றும் வேண்டாம் ஐயா!
ஒரு பத்தி வாங்கிக்குங்க"!!
எதிரே வெள்ளை தேவதை மெலிதாய் சிரித்ததிட,
மீண்டும் முகம் திருப்பினான் பொய் கோபத்தில்
" வேலை இல்லை இவனுங்களுக்கு"
உள்ளே இடது ஓரத்தில் உறுத்தியது,
வேலைக்காக அலையும் அவன் பாக்கெட்டின் வெறுமை..!!

சிலவரிகளில்!Where stories live. Discover now