நான் யாரென்று தெரியுமா?
நம்ம ஜாதிதான்டா ஒசத்தி!
என் சொத்து மதிப்பு தெரியுமா?
என்ன எதிர்த்து பேசின, அவ்ளோ தான்!!
நான் எவ்வளவு பெரிய.....
தம்பட்டம் அடித்து வந்த ,
என் வாயில் வார்த்தைகள் வற்ற!!
பெருமை மறந்து நின்றேன்.
கடல் தாய் உன் முன்பு!
என் சிறுமை உணர்ந்தேன்,
சீறிய உன் அலைகளின் அழகில்!
இயற்கை அழகினையும்,
இறைவனின் ஆத்திரத்தையும்...
உன்னுள் பார்த்தேன் என் தாயே!!
புதிய மனிதனாய் நடந்தேறி போகிறேன்,
உன் கரைகளில் இருந்து!!!
நன்றியுடன் !!!