இறைவன் இட்ட வட்டம் இந்த வாழ்க்கை,
அதில் தொடக்கம் முடிவு வெவ்வேறு இல்லை.
வட்டத்தில் ஓடுது குதிரை கோடி....
ஒண்ணு மற்றத ஜெயிக்க ஓடுது..
மற்றது ஜெயித்ததை ஒழிக்க ஓடுது!
தொடங்கின இடத்தில வந்து நிக்குது வாழ்க்கை,
அதுல முந்திவிட அவசரம் எதுக்கு?
வாழ்க்கையில் சாதிக்க ஒண்ணுமில்ல,
உனக்கு நான் போதிக்க புத்தனுமில்லை
.
பணம் இருந்தாலும் இல்லைனாலும்,
பிணம் பிளாட்டினம் ஆகிடுமா என்ன?
தங்கப் பெட்டியில் புதைத்தால் மட்டும்,
மக்காதா என்ன என் தேகம்.
எனக்கு சாதனையாளனாய் சரித்திரம் வேண்டாம்…
-தினம் தினம் புதிதாய் பிறந்திட துடிக்கிறேன்.
ஆடம்பர சவ அடக்கம் வேண்டாம்…
-நொடி நொடியும் அழகாய் வாழ்ந்திட முயல்கிறேன்.
தேவைக்கேற்ற பணம் கொடு….
தரித்திரம் அண்டாத மனம் கொடு…
நோயற்ற உடல் கொடு…காதலுடன் ஒரு குடும்பமும்,
இன்னும் ஒரு வரமும் கொடு இறைவா!!
மத சாயமின்றி…மனதில் மாசின்றி….
ஆடம்பற ஆசையின்றி….உதட்டில் பொய்யின்றி….
வாழும் வரம் கொடு -மனிதனாய் மட்டும்!!