பயணம் - 5

1.8K 102 30
                                    

ராணி  கிளம்பிய பத்து நிமிடத்தில் ராகினியின் தந்தை வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினார்.

"வாங்க அப்பா... உங்களுக்காக தான் வெயிட்டிங்..." என்ற ராகினியை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு "ரெப்ரஸ் ஆகிட்டு வரேன் மா" என்றார் அவளின் தந்தை.

"சரிங்க அப்பா, நான் உங்களுக்கு டிபன் எடுத்து வைக்கிறேன் வாங்க" என கூறிவிட்டு சமயல் அறைக்குள் நுழைந்தாள் ராகினி.

தன் தந்தை வந்ததும் சாப்பாட்டை பரிமாறினாள், பின் இருவரும் காற்று வாங்க மாடிக்கு சென்றனர்.

"ஏதோ சொல்ல வந்தியே என்னது மா..." என ராகினியின் தந்தை வினாவினார்.

" ஆமாம் பா, ராணி இந்த விடுமுறையில ஒரு ட்ரிப் ப்ளான் வச்சிருக்கா அதுவும் அட்வன்சர் ட்ரிப் பா.... என்னையும் கூப்பிட்டா,  நான் உங்கக்கிட்ட கேட்டு சொல்லரேன்னு சொன்னேன், என்னப்பா போகட்டா? " என ராகினி கேட்டு முடிக்க, " எந்த ஊரு? எவ்வளவு நாள் ட்ரிப்" என ராகினியின் தந்தை கேட்டார்.

"ஜவ்வாது மலை, ஐந்து நாள் " என பதில் கூறினாள் ராகினி.

"ஜவ்வாது மலையா? " என அதிர்ச்சியாக கேட்டார் ராகினியின் தந்தை.

"ஆமாம் பா.... ஏன் இவ்வளவு அதிர்ச்சி... " என்றாள் ராகினி.

"வேண்டாம்மா... ஜவ்வாது மலை வேண்டாம். நீயும் போக வேண்டாம், ராணியையும் போகமல் தடுத்து நிறுத்து" என்றார்.

"ஏன் அப்பா, என்னனு சொல்லுங்க... ப்ளீஸ் " என கெஞ்சினாள் ராகினி.

"அது ஒரு பெரிய கதை, நான் விஏஓ வா இருந்த காலத்துல எனக்கு ஜவ்வாது மலையில தான் போஸ்டிங் போட்டாங்க, மலைமேல கிராம மக்கள் வசிக்கிராங்க, ஆனா பேருந்து வசதி, பாதை எதுவும் இல்ல, அங்க இருக்க ஒரே அரசு கட்டிடம் விஏஓ க்காக அரசு கொடுக்கும் கட்டிடம் தான். மத்தபடி மக்கள் எந்த ஒரு பொருள் வாங்கவும், வெளியூர் போகவும் மேல இருந்த அடர்ந்த காடு வழியா தான் கீழே வரனும். நான் ஜவ்வாது மலையில வேலை செய்யும் போது எனக்கு கல்யாணம் ஆகல, அதனால எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலகத்திலேயே இருந்துப்பேன். சனி ஞாயிறு லீவ்ல இங்க வந்திடுவேன். ஓட்டு கேட்க மட்டும் வரும் அரசியல்வாதிகள் இந்த மக்களின் கோரிக்கை எல்லாம் கேட்டிட்டு தேர்தல் முடிஞ்சதும் காத்தோட விட்டிடுவாங்க, அரசின் எல்லா சலுகைகளும் இவங்களுக்கு வாங்கி தரனும் என்ற என்னம் எனக்கு இருந்தது. ஒரு நாள் வழக்கம் போல வெள்ளிக்கிழமை சாயுங்காலம் மலையை விட்டு கீழே இறங்கினேன் வீட்டிற்கு போக, என் கூட துணைக்கு ஒருவன் வந்தான். இருட்டிக் கொண்டே போனதும் பயம் நெஞ்சை உலுக்கியது. என்ன செய்வது என தெரியாமல் முழித்தேன்."

காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)حيث تعيش القصص. اكتشف الآن