அர்ஜூன் அப்பதான் கவனிக்கிறான்.. நைட்ல மழை பெஞ்சிருக்கு.. சக்தி அர்ஜூனை நினைச்சு அழுதுட்டே.. படுத்திருந்தா.. சாரல் அவ மேலயும் தெறிச்சுது.. இருந்தாலும் எழுந்து ரூமுக்குள்ள போகாம படுத்திருந்திருக்கா..
அதில காய்ச்சல் வந்து நடுங்கியபடி இருக்கும் போது தான் அர்ஜூன் வந்து பார்த்தான்.
அர்ஜூன் அவளை தூக்கிட்டு வந்து கட்டில்ல படுக்க வைக்கிறான்.. டாக்டருக்கு போன் பண்ணிட்டு அர்ஜூன் சக்தி பக்கத்திலே இருந்து பார்த்துக்கிறான்..
எப்பவும் காலையில சீக்கிரம் வர்ற சக்தி.. இன்னும் வரலைனு அவளை பார்க்க இந்திரா வர்றாங்க.
அர்ஜூன் பதற்றமா அவளை பார்த்துக்கிறத பார்த்துட்டு.. "அர்ஜூன்.. அம்முவுக்கு என்னாச்சு.."னு கேட்கிறாங்க.
"காய்ச்சல் அடிக்குது மா.."னு அர்ஜூன் சொல்றான்.
"டாக்டருக்கு போன் பண்ணீயா அர்ஜூன்.."னு இந்திரா கேட்கிறாங்க.
"பண்ணிட்டேன் மா.."னு அர்ஜூன் சொல்றான்.
"அர்ஜூன்.. அம்மு டிரெஸ் லாம் ஏன் ஈரமா இருக்கு.. மழையில நனைஞ்சாளா.. ஏன் அர்ஜூன் நீ அவளை நனையவிட்ட.."னு இந்திரா கேட்கிறாங்க.
"அது..அது.. நான் தூங்கிட்டேன் மா.. பார்க்கலை.."னு அர்ஜூன் சொல்றான்.
"சரி விடு.. சொன்னா கேட்கவே மாட்டா.. குழந்தை மாதிரி நடந்துக்கிறா.."னு புலம்பிட்டே.. அவளுக்கு வேற டிரெஸ் போட்டு விடுறாங்க.
அதுக்குள்ள டாக்டரும் வந்துடுறாங்க.
"மழைல நனைஞ்சதால வந்த fever தான்.. இன்ஜெக்சன் போடுறேன்.. சாப்பிட எதாவது கொடுத்துட்டு டேபிலட்ஸ் கொடுங்க.."னு டாக்டர் சொல்லிட்டு கிளம்புறாங்க.
அர்ஜூன் சக்தி பக்கத்திலே உட்கார்ந்து பாத்துக்கிறான்.. அப்ப அர்ஜூனுக்கு கம்பெனில இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு போன் வருது.
ஆனா அர்ஜூனுக்கு கிளம்ப மனசேயில்லை. இந்திரா தான்.. "சக்தியை நான் பாத்துக்கிறேன்.. நீ மீட்டிங் அட்டெண் பண்ணிட்டு வந்துடு.."னு சொல்றாங்க.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..