தன் கையில் உள்ள பையில் இருந்து அவள் வாங்கியதை காண்பித்தால்...
அதை பார்த்தவன் பற்களை கடித்தப்படி தலையில் அடித்துக் கொண்டான்...
க்யூட் நா?என சனா இளித்தப்படி கேட்க...
லவ்வர் கிட்ட அசிங்கமா பேசக் கூடாதுனு இருக்கடி...ஒழுங்க ஒடிடு என்றான்
போடா உன் டேஷ்ட் மகா மட்டமா இருக்கு...நான் என்ன பண்ணுறது??
ஏய் இந்த டை எல்லாம் கட்ணா என்னவோ எல்.கே.ஜி பாப்பா ஃபீல் குடுக்கும்டி,அப்போயே அதை நான் கர்சீப்பாதா யூஷ் பண்ண,சோ என் செல்லக் குட்டில போய் அதை ரிட்டர்ன் பண்ணிட்டு வாடா என அவன் கெஞ்ச
அவனை ஒரு நிமிடம் முறைத்தவள்,அந்த பையை அவனிடம் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்...
கடவுளே!!சரி இந்த டையை யூஷ் பண்றடி நில்லு என அவன் சொல்ல... இதுதான் நடக்கும் என முன்பே அறிந்தவள் மனதிற்குள் சிரித்தவாரே அவனிடம் சென்றால்...
அந்த பேக்ல என்ன இருக்கு என அவளிடம் இருந்த மற்றொரு பையை சுட்டிக்காட்டி கேட்டான்...
அதிலிருந்து இளநீல நிற சட்டையை எடுத்துகாட்டு...டைக்கு சூட் ஆகும்னு இதை எடுத்தேன் என்றாள்
இவளோட தொல்லை தாங்கலமா😬அடியே உனக்கு மனசாட்சியே இல்லையாடி எல்லாரும்,ஷர்ட் எடுத்துட்டு அதுக்கு டை செலக்ட் பண்ணுவாங்க,இங்க பாரு😤எல்லாம் இவ தலைகீழாதா பண்ணுவா என்றவனிடம் பதில் அளிக்க சனா வாய் திறக்க
ஹா வெய்ட் பேபி நான் இன்னும் முடிகலை என்று தொடர்ந்தவன்,என் வாட்ரோப் ஃபுல்லா ப்ளு ஃபாமலில இருக்க லைட் ப்ளு,டார்க் ப்ளு,ஸ்கை ப்ளு,ப்ரூஷியன் ப்ளு,ஒய்லட்னு எல்லா கலர்லையும் ஷர்ட் எடுத்துட்ட....இதுக்கு மேல எதாவது விட்டு வெச்சிருக்கியா??என அவன் நக்கலாக கேட்க
அவன் கையில் இருந்த பையை வாங்கியவள்,நீ திமிரா பேசிட்டடா😬,இந்த ட்ரெஸ் வேண்டாதான??நெக்ஷ்ட் வீக் என் மாமா பையன் பர்த்டே வருது...உனக்கும் அவனுக்கும் சேம் சைஸ்தா சோ நோ ப்ராப்ளம் என்றாள்...
அதை மறுபடியும் அவளிடம் இருந்து வாங்கியவன்,நீ எனக்காக செலக்ட் பண்ணத நான் எவனுக்கும் தர மாட்டேன் என்றான்...
அதன் பின்னர் அவன் அவளுக்காக வாங்கிய ஜிமிக்கையை காண்பிக்க,அது அவள் பல நாட்கள்,பல கடைகளில் தேடி அலைந்த ஒன்றாக இருந்ததை அறிந்தான்...
அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக அவனுக்கு சன்மானமும் கிட்டியது😋
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அந்த நாட்களை எண்ணியவளின் இதழ்கள் சிரிக்க கண்கள் அழுதது...
அங்கு தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டிருந்தவள்...ஏன்டா இப்படி பண்ற உன்னை மறக்கவும் முடியல,நினைக்கவும் விரும்பல என்றபடி மீண்டும் அழ ஆரம்பித்தாள்... யாரோ உள்ளே வரும் சத்தம் கேட்க முகத்தை சுத்தம் செய்துக் கொண்டு வெளியேறினாள்...
அன்று தன் தோழிகளிடம் சிறிது நேரம் பேசியதில்,கொஞ்ச நேரம் அவன் நினைவுகள் தரும் வேதனையை மறந்தால்...
சிறிது காலத்தில் அவர்களின் காதல் நினைவுகளுக்கும் கடவுள் முற்று புள்ளி வைக்க போகிறான் என்பதை அறியாமல்!!!