Scene - 4 : ஆதிக்கு முன்...

83 13 3
                                    

மூவரும் தப்பி ரெசிடென்னசி ஐ அடைந்தனர். வில்லியம்ஸ் ராகவன் தப்பிக்க போலி பாஸ்போர்ட் மற்ற டாக்குமெண்ட் ரெடி செய்தார்.
மூவரும் தமிழகம் வந்தனர்.
தமிழகம் வந்ததும், தமிழகத்தில் பரபரபரப்பு. கீழடி இல் கடைசி km மூடப்போவதாக அனைவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

மூவரும் உடனே கீழடி விரைந்தனர். அங்கு பெரும் மக்கள் கூட்டம்.கீழடியை மூட விடாமல் கோஷமிட்டுக்கொண்டிருந்தது.
ஆனால் சிரானின் பார்வை வேறு பக்கம் திரும்பியது.
அனைவரும் கோஷமிடும் நேரத்தில் ஒருவர் மட்டும் தோண்டப்பட்ட இடத்தில் நின்று குழியை மூடும் ஜேசிபி மீது மண்ணை வாரி வியூசிக்கொண்டு இருந்தார். அவர் கண்ணில் அப்படியொரு ஏக்கம், கவலை சோகம்.

சிரான் அவரையே பார்க்க ராகவனும் நாயரும் பார்த்தனர்.
ஜேசிபி தோண்டப்பட்ட குழியை முழுவதுமாக தடையின்றி மூடியது. அங்கு அழுதுகொண்டிருந்த நபர், தன்னால் தடுக்க முடியவில்லை என்ற சோகத்தில் அப்படியே நடந்து சென்றார்.
இவர்கள் மூவரும் தங்கள் காரில் அவரை பின் தொடர்ந்தனர்.
பின் தொடர, அவர் அப்படியே நடந்து அங்கு இருக்கும் தெருவுக்குள் சென்ட்ரர். தெருவுக்குள் சென்றதும் அருகில் இருந்து ஒரு சாதரண ஓட்டு வீட்டுக்குள் சென்றார்.
ராகவன் அவரை பின் தொடர்ந்து கரை விட்டு இறங்கி அந்த ஓட்டு வீட்டின் கதவை திறக்க, கதவை தொட கையை நீட்டினான், சட்டென்று கதவை திறந்து ஒரு வால் அவன் கழுத்தில் வைக்கப்பட்டது. உடனே சிரான், நாயர் ராகவனிடம் வந்தது கத்தியை எடுக்குமாறு சமாதானம் படுத்தினர்.

அந்த மர்ம நபர் இவர்களிடம் யார் நீங்கள் ஏன் என்னை பின் தொடர்ந்தீர்கள்.? 

ராகவன் : இல்லை, நாங்கள் உங்களை ஆராய்ச்சி கூடம் அருகே பார்த்தோம். நீங்கள் நடந்துகொண்ட விதம் மற்றவர்களை விட ஆக்ரோஷமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது என்றான்.

சரி நான் ஒரு சாதரண மனிதனே நீங்கள் நினைக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை.

கீழடி  ( Completed )Where stories live. Discover now