என் மௌனத்தை
அறியும் என் மன்னன்
என் கவனத்தை ஈர்க்கும்
என் கண்ணன்..எனக்கும் இடம் உண்டா
அவன் நெஞ்சில் என நான்
எண்ணித் தவிக்கையில்
அவனின் பிரதிபிம்பமாய்
என்னை காட்டி எள்ளி
நகையாடுகிறான்
என் கள்வன்!!நான் கொண்ட வலிமை
அனைத்தும் கவர்ந்து
செல்லும் மாயன் அவன்...ஆயுதம் ஏதுமின்றி
கடத்திசெல்கிறான்
என் இதயத்தை
சிறு புன்னகை கொண்டு
என் கள்வன் அவன்!