நான்...
தாயின் கருவறையில் உடன் அனுக்களுடன் போட்டியிட்டு...விரைந்து முன்னேறி கருவாய் சேர்ந்து வெற்றி கண்டேன்...!பாடசாலையில் சக மாணவர்களுடன் போட்டியிட்டு சிறப்பாக படித்து முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றேன்...!
உடல் வலிமை...,
மன மகிழ்மை தரும்...விளையாட்டிலும்...என் நண்பர்களை தோற்கடித்து வெற்றி பெற்றேன்...!எனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தாய் தந்தையிடம் வாதாடி வெற்றி பெற்றேன்..!
சின்ன சின்ன விவாதங்கள்...,
பெரிய பெரிய முடிவுகள் என்று கணவரிடம் வெற்றி பெற்றேன்...!மாமியாரின் எரிச்சலான வார்த்தைகளுக்கு தக்க பதிலடி தந்து வெற்றி பெற்றேன்..!
என் குழந்தைகள் என்னை மதித்து நடக்கும் அளவிற்கு அவர்களை பாதுகாத்து வெற்றி பெற்றேன்...!
ஆம் எல்லாவற்றிலும் ஆற்றல், ஆர்வம், வலிமை..,விடாமுயற்சி என்று என்னுடைய அனைத்து கவனத்தையும் தந்து எல்லா வகையிலும் வெற்றி பெற்றேன் ...
தோல்வியே கண்டதில்லை...
என்று தானே நினைக்கிறீர்கள்...?
என் வெற்றிகளில் தான்...,நான் பல தோல்விகளை கண்டேன்...
எப்படியென்றால்....
கருவில் இருந்தே...,போட்டி போடும் குணம் வெற்றி பெற வேண்டும் எண்ணமே எனது முதல் தோல்வி....,
பாடசாலையில்...
என் சக மாணவர்களுடன்...சேர்ந்து படித்து அவர்களுக்கு தெரியாததை நான் சொல்லிக்கொடுத்து...வெற்றி பெற்றிருந்தால்...நான் ஒரு நல்ல மாணவியாக வெற்றி பெற்றிருக்கலாம்...,நான் மட்டும் முன்னேற வேண்டும் என்ற மனநிலையில் நான் தோற்றேன்..
விளையாட்டிலும்...என் நண்பர்களை ஒரு முறையேனும்...வெற்றி பெற வாய்ப்பு தந்திருந்தால்...அவர்களுடான நல்ல நட்பை பெற்றிருக்கலாம் அதிலும் நான் தோற்றேன்..,
வாழ்க்கை...துணையை தேர்ந்தெடுப்பதில்...அடம்பிடித்தேனே தவிர ..,பெற்றோரிடம் பொறுமையாக...எடுத்துச்சொல்லி அவர்கள் மனமுவந்து சம்மதிக்க வைக்காமல் ஒரு நல்ல மகளாகா நான் அங்கு தோற்றேன்..
கணவரிடம்...விட்டுக்கொடுக்காமல் விவாதிப்பதிலும்...,கலந்துரையாடமல் முடிவெடுப்பதிலும்...,நல்ல மனைவியாக இல்லாமல் தோற்றேன்..
மாமியார்...இன்னொரு தாயென்று பாராமல்...அவர்களின் வார்த்தைகள் எரிச்சலா எண்ணி அவரை மதித்து நடவாமல்...நல்ல மருமகளாக இல்லாமல் அங்கையும் நான் தோற்றேன்..
உண்மையான வெற்றி...
விட்டுக்கொடுப்பது..,அன்பு செய்வது, மதித்து நடவது..,தேற்றுவது.., ஊக்குவிப்பது...,உடனிருப்பது..,தோள் கொடுப்பது..என்பதை எண்ணாமல் நான் கண்ட வெற்றி அனைத்துமே என் தோல்வி தான்...!
YOU ARE READING
🔅வெற்றியின் கைதி🔅
Narrativa generaleநமது வெற்றிகள்... சில தோல்விகளை கண்டால் மட்டுமே.... நிறைவான மகிழ்வை தந்திடும்...!