1🎊

2.5K 37 3
                                    

"பா.."
"பா.... "

"தருண்... " தருணின் நண்பன்..செல்வா.

" செல்வா‌‌.. அப்பாவ எந்திரிக்க சொல்லுடா.. பா.. "

நண்பர்கள் இருண்டு பேரும்(செல்வா, பாஸ்கரன்.) அவன பிடிச்சு இழுக்க பார்த்தாங்க..

எரிமேடையில் கிடந்த தந்தையை கட்டி அணைத்து கதறிய தருணை , இதுவரை அவன் அழுகுரல் கேட்காதவர்கள் உற்று நோக்கியதுடன் நண்பர்கள் கூட பரிதாபத்தோடு பார்க்கத்தான் செய்தார்கள்..

நெற்றியில் மூன்று தையலும் , வலது முழங்க அருகே ஐந்த தையலும் மேலும் பல காயங்கள் அவன் உடம்பில் இருந்த போதும் அவை வலிக்கவில்லை அவனுக்கு.. தலையோடு அடித்துக்கொள்ள ஆரம்பித்தான்.

"நீங்க சொல்றபடியே நான் கேட்கிறேன் பா.. வேகமா கார் ஓட்ட மாட்டேன் பா இனிமே. ப்ளீஸ் பா.. "

மாதவன் இவ்வளவு நேரம் மாதவனும் கண்கலங்கியபடி மௌனமா நின்னுட்டு இருந்தார். தருணோட உளறல்கள் அதிகமாகவும், அவன வேகமா வந்து இழுத்திட்டு போனார்.

அவருக்கு புரியாமல் இல்லை அவனோட வலி.. அவருக்கு மாமனார் என்றாலும் தருணுக்கு அவர் தந்தை அல்லவா??

"மாப்ள.. என்ன பாரு.. இப்படியே ரொம்ப நேரம் வச்சிருக்க முடியாது. அவர நிம்மதியா அனுப்பிவை. " மாதவன்

"மாமா.. அப்பா மாமா.. அவர நான் தானே மாமா கொல பண்ணிட்டேன்.நான் கார் ஓட்டலன்னா. "தருண்

அவன் கைய வச்சியே அவன் கண்ணங்கள்ல அறைந்தார்.

" உளறாத உளறாத.."

பித்துபிடித்தார் போல் பிதற்றினான்..

அவன சமாதானம் படுத்த முடியாதுன்னு அவன் நண்பர்கள்ட்ட அவன‌ ஒப்படைத்துவிட்டு சடங்குகள வலுக்கட்டாயமாக செய்ய வைத்தார்.

ஆமாம். குடும்ப பொறுப்பை மூத்த மருமகன்தானை ஏற்கவேண்டும். இவர் சிவசுந்தரம்- பார்வதி தம்பதியின் ஒரே பெண்ணை (மலர்விழி)மணம் முடித்த ஒரே மருமகன் , இந்த அழகிய குடும்பத்தின் முதல் பேத்தியின் (அகல்யா) தந்தை வேறு..

இமைWhere stories live. Discover now