ரிதம்...21

1K 33 97
                                    

ஆளைவிட்டா போதும் என்று ஓடிவிட்டாள், அங்கிருந்து. வீட்டுக்கு வந்த டையர்டுல தூங்கிட்டா.

ஆதி கால் செய்யவும்.. "சாரா ஓகே வா ஜாப்?" என்றான் .

சாரா சற்று தயங்கி விட்டு... "ஓகே தான் ஆதி, ஆனா அங்க இருந்த ஒருத்தன் ஓவரா பண்ணிட்டான் அதான் யோசிக்கிறேன்" என்றாள் சாரா.

ஆதி ஒடனே... "என்னது சாராவே ஒருத்தன பாத்து பயந்துட்டாலா!!!!!" என்றான் ஆச்சரியமாக.

'சாரா கெத்த விடாத....' என்று நினைத்தவள். "அநியாயமா ஒரு கொலை பண்ண வேணானு பாத்தேன், யார் செத்தா எனக்கு  என்ன நாளைல இருந்து வேளைக்கு போக போறா இந்த சாரா" என்றாள் கெத்தாக.

ஆதி சிரித்துக்கொண்டு போனை வைத்தான். "இவ இம்ச இனி இருக்காது "என்று சற்று ஆறுதலாகவும் இருந்தது. சாராவிற்கு தெரியாம ஆதி இன்னொரு பிளான் போட்டான்," அர்ஜுனையும் சாரவையும் சேத்து வச்சா என்ன" என்று யோசித்தவன் யோசித்த வேகத்தில், "அட ச்சை நம்ம வில்லன் தான், ஆனா நல்ல வில்லன்" என்று அவனுக்கு அவனே அறிவுரை கூறிக்கொண்டான். அப்போது தெரியவில்லை இவங்க ரெண்டு பேரும் தான் சேரப்போறாங்கன்னு.

இருந்தாலும் ஆதிக்கு இந்த எண்ணம் வர காரணம், அன்று அர்ஜுன் சாராவை முதல் முதலாய் பார்த்த போது நடந்து கொண்டதை நினைத்து பார்த்தான் ஆதி.

ஒருமுறை ஆதி அர்ஜுன் ஒன்றாக செல்லும் போது சாராவை பார்த்த அர்ஜுன் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான். 'அவ என் friend ' என்று ஆதி சொல்லும் முன்பு.

சாராவை பின்தொடர்ந்து சென்றுவிட்டான் அர்ஜுன். அதை பிறகு சொல்ல ஆதிக்கும் நேரம் இல்லாமல் போக, ஒருநாள் சொல்லிடலாம் என்று வரும் போது ஆதி ரித்திகா மோதலில் எல்லாம் மறந்துவிட்டான் ஆதி.

குடும்பத்துடன் உள்ள உறவும் முறிந்து, தனிமரமாக பிசினஸ் பின்னாடி ஓடிக்கொண்டு இருந்தான் ஆதி, எல்லோரையும் மறந்து.

பார்த்த ஒடனே அர்ஜுனிடம் மயங்கிவிட்டாள் சாரா. ஆதி அர்ஜுன் எதாவது கிறுக்குதானம் செஞ்சி அடிவாங்குவான்னு நினச்ச ஆதிக்கு பெருத்த அடி, "சாரா அர்ஜுனை அவமானப் படுத்துவாள்" என்று நினைத்த ஆதிக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

காதல் ரிதம்( Completed)Dove le storie prendono vita. Scoprilo ora