ரிதம்....5

2.1K 62 54
                                    

"என்னது கண்ணை நோண்டி எடுக்குறியா...... அர்ஜுன் என் தங்க குட்டி இல்ல கண்ணு இல்லமா எப்படி பார்க்க முடியும் ப்ளீஸ் வேண்டாம் அர்ஜுன்..." என்று பதுங்கியவாறு பேசினாள்.

அவள் பேசுவதை காதில் வாங்காது நெருங்கி வந்தான்.

"சாக்லேட் வாங்கி தரேன் ப்ளீஸ் வேண்டாம் குட்டி பாப்பா......பெரிய பாப்பாக்கு வாங்கி தருமாம் குட்டி பாப்பா சாப்பிடுமா எப்படி டீல் ஓகே தானே".... அனைத்தும் மறந்து அவனிடம் பேரம் பேசினாள்...

இவள் கூறுவதை எதையுமே காதில் வாங்காமல் அவள் முகத்தில் மறைத்திருக்கும் கைகளை விலக்கி கண்களுக்கு இடையே இரண்டு விரலை கொண்டு போனான்...

இவர்களுக்கிடையே நடந்துகொண்டிருக்கும் சண்டைகளை மறந்து இவள் பேசிக்கொண்டே இருந்தாள்... அடிக்கடி எல்லாம் மறந்து.... லூசு தனமா பேசவும்....இவன் அவளை வித்தியாசமா பார்க்க.

அதுவும் சிறிது நேரம் மட்டுமே....

"ஓ அப்படி பேசிபேசி,உன்னிடம் மயங்கி இருக்க நான் என்ன பூனைக்குட்டியா? நினைச்சியா போடி".

"ப்ளீஸ் ப்ளீஸ் நா ரெண்டு சாக்லேட் வாங்கி தரேன்" என்றாள்.

அவளின் கொஞ்சும் மழலையின் குரல்கேட்டு நிகழ் காலத்து சண்டையை அர்ஜுனுக்கு மறக்கடித்தது.

இப்பொழுது இருக்கும் நிலையை அவனும் மறந்தான்... இது என்னவோ மாயம்.

"கண்டிப்பா இரண்டு சாக்லேட் வாங்கி தருவியா". இவன் அவளிடம் இறங்கி பேரம் பேச...தொடங்கினான் வழக்கம் போல.

"ரெண்டு என்ன கடைக்கு கூட்டீட்டு போய், எல்லாம் வாங்கித்தரேன்" என்று வாக்கு கொடுத்தாள்.

அவன் சமாதானம் ஆனதும், அவள் தலையை ஒரு புறம் சாய்ந்து கேட்கும் அவளை அவன் அந்த கோவத்திலும் ரசிக்கதான் செய்தான்.

அவனின் பார்வை அவளின் கன்னத்தின் மீது இருந்தது மீண்டும் கன்னத்தை கைகளால் பொத்திக் கொண்டாள்.

இந்தமுறை அவன் அறையும் நோக்கத்தில் பார்க்கவில்லை.....

சற்றுமுன்பு மறந்ததை அவள் செய்கையால் நினைவு படுத்த.... அந்த செயல் அவனை நிகழ்களத்துக்கு கொண்டு வந்தது.

காதல் ரிதம்( Completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang